No menu items!

சிம்பு கார் மோதி ஒருவர் பலி – என்ன நடந்தது?

சிம்பு கார் மோதி ஒருவர் பலி – என்ன நடந்தது?

காவல்துறையினர் விசாரணை நடத்திய போது விபத்தை ஏற்படுத்திய கார் நடிகர் சிம்பு பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள இளங்கோ சாலையில் மார்ச் 18ஆம் தேதி இரவு 7 மணிக்கு நடந்த விபத்தில் 70 வயது நடைபாதை வாசியான முனுசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து சென்னை பாண்டி பஜார் போக்குவரத்து காவல் துறை விசாரணையில், நடக்க இல்லாத முதியவர் முனுசாமி சாலையை தவழ்ந்து கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த SUV கார் ஒன்று அவர் மீது ஏறி விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போது விபத்தை ஏற்படுத்திய கார் நடிகர் சிம்பு பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

விபத்து நடந்த போது காரில் டி.ராஜேந்தரும் அவரது பேரனும் இருந்திருக்கிறார்கள்.

அந்த சாலை திருப்பம் ‘Blind Curve’ எனப்படும் கண்களை மறைக்கும் திருப்பம். அந்த திருப்பத்தில் ஒரு தவழ்ந்து சாலையைக் கடக்க முயன்றதை சிம்புவின் கார் ஓட்டுநர் கவனிக்கவில்லை என்பதால் விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

கார் ஒட்டுநர் செல்வம் மீது ஐபிசி 337, 279 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது காவல்துறை. காவல்துறை விசாரணையில் ஓட்டுநர் செல்வம், கவனக்குறைவால் மட்டுமே விபத்து ஏற்பட்டதாகவும் முதியவர் தவழ்ந்து வந்ததால் கார் முன்பகுதி அவர் வந்ததை மறைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்ததும் சற்று தொலைவில் காரை நிறுத்தி, டி.ராஜேந்தர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...