No menu items!

விஜய் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு திடீர் ஆன்மிகப் பயணம் !

விஜய் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு திடீர் ஆன்மிகப் பயணம் !

தனது மூன்று நாள் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்ட முதலமைச்சர் விஜய், இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு நேரடியாகக் கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளார். மங்களூரிலிருந்து சாலை வழியாக உடுப்பியில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று கொண்டிருக்கிறார். முதல்வரின் இந்தத் திடீர் ஆன்மிகப் பயணம், ஒட்டுமொத்தத் தமிழகத்தின் பார்வையும் கொல்லூர் நோக்கித் திரும்பியுள்ளது.

இக்கோவிலுக்கு போகும் தமிழ்நாட்டு முதல்வர்களில் விஜய் முதல் நபர் இல்லை, இதற்கு முன்பு தமிழ்நாட்டின் முதல்வர்களாக இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரும் இக்கோயிலுக்கு சென்று வழிப்பட்டு உள்ளனர்.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில், கொடச்சாத்திரி மலையின் அடிவாரத்தில், சவுபர்ணிகா நதிக்கரையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கொல்லூர் மூகாம்பிகை கோவில் அமைந்துள்ளது. ஆன்மிக ரீதியாக இத்தலம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுவதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு.

இங்கு பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளின் ஒருங்கிணைந்த ஒரே வடிவமாக மூகாம்பிகை தேவியாக காட்சி அளிக்கிறார். கலை, வீரம், செல்வம் ஆகியவற்றின் ஒற்றை வடிவமாக காட்சி தருகிறார் மூகாம்பிகை தேவி. பத்மாசன கோலத்தில் அமர்ந்திருக்கிறார் மூகாம்பிகை தேவி.

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தனது திரையுலக மற்றும் அரசியல் வாழ்க்கையில் கடுமையான சவால்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்த காலகட்டங்களில், எதிரிகளைச் சமாளிக்கும் அசாத்திய ஆற்றலையும் மனவலிமையையும் பெறுவதற்காக இந்தக் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வந்து தீவிரமாக வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அவரது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறி அரசியலில் அசைக்க முடியாத நிலையை பெற்ற போது, கொல்லூர் மூகாம்பிகை தேவிக்குத் தனது நன்றிக்கடனாக 1 கிலோ எடையும் 2.5 அடி நீளமும் கொண்ட ஒரு பிரம்மாண்ட ‘தங்க வாள்’ ஒன்றைக் காணிக்கையாகச் செலுத்தினார். அந்தத் தங்க வாள் இன்றும் கோவிலின் கருவறையில் பத்திரமாக வைக்கப்பட்டு, அதற்குத் தனியாகச் சிறப்புப் பூஜைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

எம்ஜிஆர் காட்டிய அதே ஆன்மிகப் பாதையைப் பின்பற்றிய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் இந்த மூகாம்பிகை தேவியின் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். அரசியல் ரீதியாகத் தான் இழந்த அதிகாரம் மற்றும் பதவிகளைத் மீண்டும் பெறவும், அரசியல் எதிரிகளைத் தனது பாதையிலிருந்து முழுமையாக விலக்கவும் இக்கோவில்’சண்டியாகம்’ நடத்தினார்.

அப்போது, எம்ஜிஆர் காணிக்கையாக வழங்கிய அந்தத் தங்க வாளைச் சிறிது நேரம் தனது கைகளில் ஏந்தி பிரார்த்தனை செய்து முக்கிய வரலாறு. அதன் பிறகு அவர் சந்தித்த அரசியல் வெற்றிகளும், 2011 முதல் தொடர்ந்து ஆட்சியைப் பிடித்தார்.

முதலமைச்சர் விஜய் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே, முருகப்பெருமான் அசுரர்களைப் போரில் வீழ்த்திய வரலாற்றுத் தலமான திருச்செந்தூருக்குச் சென்று எதிரிகளை வெல்ல வேண்டும் என்ற உத்தியுடன் தனிப்பட்ட முறையில் வழிபட்டார். நினைத்தது போலவே அவரும் போரில் வென்று தற்போது தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளார்.

இந்த நிலையில், தற்போதைய பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் அரசியல் சவால்களுக்கு மத்தியில், யாரும் எதிர்பாராத வகையில் அவர் கொல்லூர் மூகாம்பிகையை வழிபடத் திட்டமிட்டுள்ளார்.

முதலமைச்சருக்குப் பலத்த ‘ஜெட் பிளஸ்’ (Z+) பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களின் தரிசனத்திற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் பாதுகாப்பு வளையங்களின் காரணமாக 2 மணி வரை பொதுமக்கள் வரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...