ஏடிஆர் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு அண்மையில் பணக்கார முதல்வர்களின் பட்டியலை வெளியிட்டது.
கடந்த 1992-ம் ஆண்டில் ஹெரிடேஜ் புட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை சந்திரபாபு நாயுடு தொடங்கினார். இதற்காக அவர் முதலில் ரூ.7,000-ஐ மட்டுமே முதலீடு செய்தார். பின்னர் வங்கியில் ரூ.50 லட்சம் கடன் வாங்கி சித்தூரில் பால் பண்ணையை தொடங்கினார். அவரது மனைவி புவனேஸ்வரி நிர்வாக இயக்குநரானார்.
புவனேஸ்வரியின் திறம்பட்ட நிர்வாகத்தால் 2024-ம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி ஹெரிடேஜ் புட்ஸ் லிமிடெட் நிறுவனம் ரூ.6,755 கோடி சாம்ராஜ்ஜியமாக உயர்ந்திருக்கிறது.
இதில் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு முதலிடத்தை பிடித்து உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.931.83 கோடியாக உள்ளது. பால் வியாபாரத்தில் கோலோச்சுவதன் மூலம் இந்தியாவின் பணக்கார முதல்வராக அவர் உருவெடுத்திருக்கிறார்.
அவருக்கு அடுத்து அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு ரூ.332.56 கோடி யுடன் 2-வது இடத்தில் உள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.51.93 கோடி, நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ ரூ.46.95 கோடி, ம.பி. முதல்வர் மோகன் யாதவிடம் ரூ.42.04 கோடி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் ரூ.38.39 கோடி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் ரூ.30.04 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன.