ரவி மோகன் சமீப காலமாக படங்களைவிட தனிப்பட்ட வாழ்க்கை காரணமாகவே அதிகம் பேசப்பட்டு வருகிறார். குறிப்பாக அவரது குடும்ப பிரச்சனைகள், விவாகரத்து விவகாரம் ஆகியவை தொடர்ந்து தலைப்புச் செய்தியாகி வரும் நிலையில், இப்போது புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது.
விவாகரத்து இன்னும் முடியவில்லை ரவி மோகன்கடந்த ஆண்டு, தனது மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்தது பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. ஆனால் அந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. முக்கியமாக, இதற்கு ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி சம்மதம் அளிக்கவில்லை என்பதும் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், ரவி மோகனும் அவரது தோழி கெனிஷாவும் கோவாவில் சுமார் 42 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு சொத்தை வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்னவென்றால் – அந்த சொத்து பதிவு செய்யும்போது “திருமணம் ஆகவில்லை” என்று ரவி மோகன் குறிப்பிட்டதாக கூறப்படுவது தான்.
திருமணமாகி பல ஆண்டுகள் வாழ்ந்து, தற்போது விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் இப்படியான தகவல் வெளியாகியுள்ளதால், இது சட்ட ரீதியாக சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் கூட, “விவாகரத்து ஆகாமலே இப்படிச் சொல்லலாமா?” என்ற விவாதம் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த சர்ச்சையில் மேலும் பேசப்படும் பெயர் கெனிஷா தான். சமீப காலமாகவே ரவி மோகன் மற்றும் கெனிஷா இணைந்து வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வெளிநாட்டு ட்ரிப் முதல் பார்ட்டி புகைப்படங்கள் வரை இருவரும் சேர்ந்து பகிர்ந்து வருவது, இவர்களின் நட்பைச் சுற்றி பல வதந்திகளை உருவாக்கியுள்ளது.
இதே நேரத்தில், ஆர்த்தி ரவி தனது சமூக வலைதளங்களில் சோகமான பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் நேரடியாக எதையும் கூறவில்லை என்றாலும், அந்த பதிவுகள் அவரது மனநிலையை வெளிப்படுத்துவதாக பலர் கருதுகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு விஜய் மற்றும் திரிஷா தொடர்பான சர்ச்சை கிளம்பியபோது, கெனிஷா குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. அப்போது கெனிஷாவிற்க்கு ஆதரவாக ரவி மோகன் வெளியான ஒரு வீடியோ கூட பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமாவில் காதல், குடும்பம், ஆக்ஷன் என பல்வேறு வகை படங்களில் நடித்தவர். சினிமாவுக்கு வெளியே, குடும்பத்தோடு அமைதியான வாழ்க்கை வாழ்ந்தவர் என்ற இமேஜ் இருந்த நிலையில், தற்போது அவரது தனிப்பட்ட வாழ்க்கையே அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.
ஒருபுறம் விவாகரத்து வழக்கு, மறுபுறம் புதிய சொத்து சர்ச்சை, இதற்கிடையில் நட்பு தொடர்பான வதந்திகள் – இப்படி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கும் ரவி மோகன் குறித்து ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.



