No menu items!

சிவகார்த்திகேயன் Vs கவின் – அதிரடி போட்டி

சிவகார்த்திகேயன் Vs கவின் – அதிரடி போட்டி

தமிழ் சினிமாவில் இரண்டு பெரிய ஹீரோக்கலூக்கு எப்பொதுமே போட்டி இருந்து கொண்டே இருக்கும். சிவாஜி – எம்.ஜி.ஆர்., ரஜினி – கமல், அஜித் – விஜய் என்று தலைமுறை தாண்டி இந்த போட்டி தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் சில ஆண்டுகளாக ஒரு குதிரையாக தனுஷ் மட்டும் ஓடிக்கொண்டே இருக்கிறார். போட்டி போட வேண்டிய சிம்பு தடுமாற்றமான மன நிலையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில்தான் சிவ கார்த்திகேயன் கையில் விஜய் துப்பாக்கியைக் கொடுத்து விட்டு அரசியலுக்கு சென்றார். அப்போதிருந்து சிவகார்த்திகேயன் அந்த இடத்திற்கு நகர்திருப்பதாக திரையுலகில் பேச்சு எழுந்திருக்கிறது. ஆனால் அவருக்கு போட்டியாக தனுஷ் இருப்பார் என்று நினைத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக கவின் வந்து சேர்ந்திருக்கிறார். ஸ்டார் திரைப்படம் கொடுத்த வரவேற்பில் கவின் மார்க்கெட் எகிறியிருக்கிறது. அதே வேகத்தில் கவின் ஹீரோவாக நடிக்க, அவரை வைத்து இயக்குனர் நெல்சன் பிளடி பெக்கர் என்ற திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்.

படம் வெளியாவதற்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பு கிடைத்திருக்கிறது. அதனால் சிவகார்த்திகேயனுக்கு சரியான போட்டியாக கவின் இருப்பார் என்கிறார்கள். இந்த நிலையில் கவினை புகழ்ந்து நெல்சன் பேசியிருப்பது கவனிக்க வைத்திருக்கிறது. அந்த விழாவில் இயக்குநர், தயாரிப்பாளர் நெல்சன் பேசியதாவது, “’வேட்டை மன்னன்’ படத்தின் போது என்னிடம் சிவபாலன் சேர்ந்தார். ’ஜெயிலர்’ படம் வரையிலுமே என்னிடம் வேலை பார்த்தார். ‘ஜெயிலர்’ பட சமயத்தில்தான் இந்தக் கதை சொன்னார். நீண்ட நாட்கள் என்னிடம் வேலை பார்த்ததால் அவருக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், ‘ஜெயிலர்’ வெற்றிப் பெற்றால் மட்டுமே சிவபாலன் படம் தயாரிப்பேன் என்று சொல்லியிருந்தேன். இதனால், ‘ஜெயிலர்’ படம் வெற்றி பெற வேண்டும் என அவர்தான் மிகவும் எதிர்பார்த்திருந்தார்.

படம் வெற்றி பெற்றதும் ‘ப்ளடி பெக்கர்’ தயாரிப்பது உறுதியானது. கவினை வைத்து செய்யலாம் என சிவபாலன் சொன்னார். ஆனால், இந்தக் கதைக்கு கவின் சரியாக இருப்பார் எனத் தோன்றவில்லை. தனுஷ், விஜய்சேதுபதி என சில பெயர் சிவபாலனிடம் சொன்னேன். ஆனால், அவர் கவின் தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து லுக் டெஸ்ட் செய்தார். அப்போதே இந்தக் கதையில் சிவபாலன் எவ்வளவு டீடெய்லிங்காக செய்திருக்கிறார் என்பது தெரிந்தது. படத்தின் முதல் பாதி நன்றாகவே செய்திருந்தார்கள். அதன் பிறகுதான் எனக்கு நம்பிக்கை வந்தது. முழுப்படமும் பார்த்தபோது சிவபாலனுக்குப் பிறகு சிறப்பாக வேலை செய்திருப்பது கவின்தான். பல காட்சிகளில் சிறப்பாக கவின் நடித்திருக்கிறார். கவின் வேண்டாம் என்று ஆரம்பத்தில் நிராகரித்து நான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன் என்பது அப்போதுதான் புரிந்தது. த்ரில்லர் படமான இதில் டார்க் காமெடி, எண்டர்டெயின்மெண்ட் என எல்லாமே இருக்கும். தீபாவளிக்கு ‘அமரன்’, ‘பிரதர்’ படங்களும் வெளியாகிறது. அந்தப் படங்களுக்கும் வாழ்த்துகள்.

இந்தப் படமும் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார். இந்த படத்திற்குப் பிறகு கவின் முதல் நிலை நடிகர்களுக்கு இணையாக பேசப்படுவார் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...