No menu items!

ஜிஎஸ்டி சீர்​திருத்​தம் மூலம் மக்​கள் கையில் பணம் புரளும் – நிர்மலா சீதாராமன்

ஜிஎஸ்டி சீர்​திருத்​தம் மூலம் மக்​கள் கையில் பணம் புரளும் – நிர்மலா சீதாராமன்

ஜிஎஸ்டி சீர்​திருத்​தங்​கள் பற்​றிய கலந்​துரை​யாடல் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் கூறிய​தாவது: ஜிஎஸ்டி வரி சீர்​திருத்​தத்​துக்கு பிறகு, வரி​குறைப்பு மூலம் கிடைக்​கும் பயன்​களை வாடிக்​கை​யாள​ருக்கு வரும் 22-ம் தேதி முதல் அளிக்க பல கம்​பெனிகள் விருப்​பம் தெரி​வித்​துள்​ளன.

ஏழைகளுக்​கும், நடுத்தர மக்​களுக்​கும் வரி நிவாரணம் அளிக்க வேண்​டும், நடுத்தர மக்​களின் விருப்​பங்​களை நிறைவேற்ற வேண்​டும், விவ​சா​யிகள் மற்​றும் குறு, சிறு மற்​றும் நடுத்தர நிறு​வனங்​களுக்கு உதவ வேண்​டும், வேலை​வாய்ப்பு உரு​வாக்​கம் மற்​றும் ஏற்​றும​தி துறை​களில் கவனம் செலுத்​து​வது முக்​கிய​மான விஷ​யங்​கள்.

ஜிஎஸ்டி வரி கடந்த 2017-18-ம் ஆண்​டில் ரூ.7.19 லட்​சம் கோடி​யாக இருந்​தது. இது 2025-ம் ஆண்​டில் ரூ.22.08 லட்​சம் கோடி​யாக உயர்ந்​தது. நாட்​டில் வரி செலுத்​து​வோர் எண்​ணிக்கை முன்பு 65 லட்​ச​மாக இருந்​தது. இது தற்​போது 1.51 கோடி​யாக உயர்ந்​துள்​ளது. ஜிஎஸ்டி சீர்​திருத்​தம் மூலம் நாட்​டின் பொருளா​தா​ரத்​தில் ரூ.2 லட்​சம் கோடி நுழை​யும், மக்​கள் கையில் பணம் புரளும்.

முந்​தைய ஐக்​கிய முற்​போக்கு கூட்​டணி அரசின் வரி முறை​கள் சிக்​கலாக இருந்​தன. இதனால் நாங்​கள் நாடு முழு​வதும் ஒரே மாதிரி​யான ஜிஎஸ்டி முறையை அமல்​படுத்​தி​யுள்​ளோம். ஜிஎஸ்டி கவுன்​சில் கூட்​டாட்சி தத்​து​வத்​துக்கு சிறந்த உதா​ரண​மாக செயல்​படு​கிறது. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...