No menu items!

தமிழ் – இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கலக்கல் நிகழ்ச்சி எது ?

தமிழ் – இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கலக்கல் நிகழ்ச்சி எது ?

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் லைவ் என்னதான் நடக்கிரதென்ரு பார்க்க நேர்ந்தது. காலையில் 8 மணிக்கு அனைவரும் உறங்கிக்கொண்டிருக்க, ரவீந்தர் மட்டும் எழுந்து தண்ணீர் குடிப்பதும், மெதுவாக நடப்பதுமாக இருந்தார். அவருக்கு வேகமாக மூச்சு வாங்கியது சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்து கொண்டிந்தார். இதுவே அரை மணி நேரமாக போய்க்கொண்டிருந்தது.

இந்த நிலையில் வெளியில் பார்வையாளர்கள் மத்தியில் ஒரு கருத்து பரவி வருகிறது. வீட்டுக்குள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பலரும் ப்ராக்டீஸ் எடுத்துக் கொண்டு வந்திருப்பதால் எல்லா போட்டிகளிலும் செயற்கையாக அவர்கள் காட்டும் ரியாக்‌ஷன் போரடிப்பதாக ஒரு பேச்சு எழுந்திருக்கிறது. அதுவும் ரஞ்சித்தும் – ரவீந்தரும் சண்டை போடுவதாகக் காட்டிக் கொண்ட சம்பவத்தில் அவர்களால் பாதிகப்பட்டவர்கள் கடும் கோபத்திற்கு ஆளானார்கள். இது பற்றிய விவாதக் குழுவுக்குள் கடுமையாக விவாதிக்கப்பட்டது. இதை கொஞ்சமும் விரும்பாமல் தனது வெற்ப்பையும் காட்ட முடியாமல் இருந்தார் ஜாக்குலின். அவரை சமாதானப்படுத்தியும் சமாதானம் ஆகவில்லை.

இந்த சீசனில் முழுவதும் விஜய் டிவியில் இருக்கும் பிரபலங்களே இருப்பதால் ஒருவிதமாக சலிப்பாக இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. முதலில் வேறு வேறு துறைகளில் பிரபலங்களாக இருப்பவர்களை தேர்ந்தெடுத்ததால் அவர்களின் பல்வேறு அனுபவங்கள் என்று வித்தியாசமான நிகழ்ச்சி கிடைத்தது. இப்போது எல்லோரும் ஒரே இடத்தில் இருப்பதால் எந்தவித வித்தியாசமும் இல்லாமல் மெதுவாக எந்தவித சுவாரஸ்யமும் இன்றி நகர்வதாக சொல்கிறார்கள்.

இதனால் அதிரடியாக புதிய நபரை கெஸ்டாக இறக்க இருப்பதாக கூறுகிறார்கள். அவர் யார் என்பதை ஞாயிறு அன்று விஜய் சேதுபதி அறிவிப்பார் என்கிறார்கள். தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விரும்பாமல் ஒரு பிரபல நடிகை இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று கலக்கியிருக்கிறார். அவர் ஸ்ருதிகா அர்ஜுன் தேங்காய் சீனிவாசன் பேத்தியான இவர் தமிழில் சில படங்களில் நடித்திருக்கிறார்.

ஸ்ருதிகாவை அறிமுகப்படுத்தும்போது சல்மான்கான் சமையல் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் என்றார். அவரை இடைமறித்து பேசிய ஸ்ருதிகா, சார் நான் அதற்கு முன்பாக நான்கு படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறேன். நான்கு படங்களுமே சூப்பர் பளாப் ஆன படங்கள் என்றார். இதை எதிர்பார்க்காத சல்மான் கான் சிரித்து சிரித்து கண்ணீல் நீர் வந்து விட்டது.

அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து விட்டது. இனி அவர் அங்கு கவனிக்கத்தக்க போட்டியாளராக வலம் வருவார் என்பது மட்டும் நிச்சயம். அங்கு இருக்கும் ஒரு பிரச்சனை கிளாமருக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். அதோடு அங்கு ஆண் பெண் எந்தவித பேதமும் இல்லாமல் நெருக்கமாக இருப்பது வழக்கம். அதற்கு ஸ்ருதிகா எப்படி தன்னை மாற்றிக் கொள்ளப்போகிறார் என்பதை இனிமேல்தான் தெரிந்து கொள்ள முடியும்.

தமிழ் – இந்தி இரண்டு போட்டிகளிலும் எப்போதும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சியாக இருப்பது தமிழ் தான். அதோடு இழந்து விட்ட சுவாரஸ்யத்தை இனி வரும் நாட்களாவது கொண்டுவருவார்களா என்பது தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...