ஆதிரை வேணுகோபால்
எந்த மனைவியுமே, கணவனிடம் விதவிதமான பட்டு புடவைகள், தங்க வைர நகைகள், கார் போன்றவற்றை எல்லாம் எதிர் பார்ப்பதில்லை. மாறாக அவளின் எதிர்பார்ப்பே கணவன் தன்னிடம் பிரியமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதே!
சில விஷயங்களை ஆண்கள் மனதில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
தன் மனைவி தன்னிடம் அப்படி என்னதான் எதிர்பார்க்கிறாள் என்பதை தெரிந்து கொண்டாலே இல்லறவாழ்க்கை இனிய நாதமாக மாறும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க இதோ சில விஷயங்கள்
அம்மாவிடமும், மனைவியிடமும் ஒரே மாதிரி பாசத்தை காட்டுங்கள் அம்மாவும் மனைவியும் இரு கண்கள் .
எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டே கிளம்புங்கள்
மனைவி தனது உடல்நிலை பற்றி கூறும் பொழுது சற்று தயவுசெய்து காது கொடுத்து கேளுங்கள்
அது கத்தியால் கீறிக் கொண்ட சின்ன காயமாக இருந்தால் கூட பரவாயில்லை.
வீட்டில் மற்றவர்கள் முன் மனைவியை மட்டம் தட்டிப் பேசாதீர்கள் .யாரிடமும் மனைவியைப் பற்றி மரியாதை குறைவாக பேசாதீர்கள். இது உங்கள் அன்னியோன்னியத்தை குறைத்துவிடும்.
தினமும் மனைவிக்கு என்று நேரம் ஒதுக்கி அவளிடம் மனம் விட்டுப் பேசுங்கள். மொட்டைமாடி இருந்தால் அவளையும் அழைத்துக்கொண்டு தாராளமாக ஒரு’walk’ போய்வாருங்கள்.
வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒருமுறை கண்டிப்பாக நீங்கள் இருவர் மட்டும் வெளியில் சென்று மனம் விட்டு பேசி வாருங்கள்.
மனைவிவித்தியாசமாக புதியதாய் ஏதாவது செய்தால் அதை இரசித்துப் பாராட்டுங்கள்.
அவ்வப்பொழுது சின்னச் சின்ன கிண்டல்கள் ,கேலிகள் செய்து விளையாடுங்க. .(மனம் உறுத்தாமல்) நண்பர்களை மட்டும் தான் கேலி செய்ய வேண்டுமா என்ன?
மனைவியை விட ஒரு கணவனுக்கு சிறந்த தோழி யாராக இருக்க முடியும். சின்ன சின்ன சீண்டல்கள் வாழ்வை ருசீகரமாக்கும்.
மனைவியை எப்பொழுதும் அழகாக பெயரிட்டோ, அல்லது செல்லப் பெயரிட்டோ அழையுங்கள்
மனைவியின் பிறந்தநாள் அன்று முதன்முதலில் வாழ்த்து சொல்லி. .சின்னதாய் க்யூட்டாய் மகிழ்ச்சி அளிக்கிற ஏதாவது பரிசு கொடுங்க.
பரிசு வாங்காவிட்டால் கூட பரவாயில்லை. நெற்றியில் அழகாக முத்தமிட்டு குட்மார்னிங் செல்லம் .ஹாப்பி பர்த்டே செல்லம் என்று சொல்லுங்க.
ஞாயிறன்று ஓய்வே இல்லாமல் வேலை செய்யும் மனைவியிடம் “வாஇரவு டிஃபன் வெளியே பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிப்பாருங்கள்.( அப்புறம் பாரு உங்களுக்கு நடக்கும் ராஜஉபச்சாரம்.)
மனைவி புதுபுடவை, நகை அணிந்துவந்து உங்களிடம் காண்பிக்கும் பொழுது எதுவுமே சொல்லாமல் ம்…ம்..என்று முனகாமல்’ வாவ் சூப்பர்’ என்று வாய் திறந்து சொல்லுங்கள்.
அலுவலகத்தில் உடன் பணியாற்றுபவர்களிடம் வேறு வழியே இல்லாமல் முகஸ்துதி செய்கிறீர்கள்அல்லவா?!ஆனால் காலம் முழுவதும் உங்களுடனேயேனேயே வரும் உங்கள் துணையைப் பாராட்டினால் குறைந்தா போய் விடுவீர்கள்.?
மனம் திறந்து பாராட்டுங்கள்.
திடீரென்று உறவினர்கள் வீட்டுக்கு வந்து விட்டால் மனைவிக்கு சமையலில் சிறிது உதவி பண்ணு.ங்க
மனைவி செய்யும் எந்த நல்ல விஷயத்தையும் மனம் திறந்து பாராட்டுங்கள். அவ்வப்பொழுது மென்மையாக தொட்டு பாராட்டலாம். தோளில் தட்டிக் கொடுக்கலாம் .
எல்லாவற்றிற்கும் மேலாக மனைவியின் மெல்லிய உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுங்கள்..அப்புறம் பாருங்கமனைவியின் மனதில் நீங்கள் எப்படி ஜம்மென்று சிம்மாசனம் போட்டு அமர்ந்து விடுவீர்கள் என்று!
உங்கள் இல்வாழ்க்கை ஒரு இனிய நாதமாக மாற .. இது எல்லாம் முடிந்தவரை பின்பற்ற முயலுங்கள்.
ஒரு விதை போட்டால் உடனேவா முளைத்துவிடுகிறது? முளைக்கநேரம் காலம் எல்லாம் இருக்கிறதல்லவா!
அது போல் தான் திருமணம் ஆனவுடன் மனைவி உன்னை புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதும்.. அவளுக்கு கொஞ்சமே கொஞ்சம் நேரம் கொடுங்கள்.