ஆதிரை வேணுகோபால்
ஜூன் 04 பாடு நிலா பாலுவின் பிறந்த நாள் இன்று..
பாலசுப்பிரமணியம் தமிழ்த் திரைப்படங்களுக்கு நிறையப் பாடல்களை பாடினார், குறிப்பாக இளையராஜாவின் இசையில் எஸ். ஜானகியோடு இணைந்தும், தனித்தும், சக பின்னணிப்பாடகர்கள் மற்றும் பாடகிகளுடன் சேர்ந்தும் 70களின் இறுதி முதல் 80களிலும் பல பாடல்களைப் பாடினார். தமிழ் திரையிசையில் இளையராஜா, பாலசுப்பிரமணியம், ஜானகி இணைப்பில் வெற்றிப்பாடல்கள் நிறைய உள்ளன. இவற்றில் கருநாடக இசையமைப்பில் வெளியான சலங்கை ஒலி (1983) பாடல்களுக்கு இளையராஜாவும் பாலசுப்பிரமணியமும் தேசிய விருதுகள் பெற்றனர். சிப்பிக்குள் முத்து (1986), உருத்திரவீணா (தெலுங்கு, 1988) இவர்கள் இருவருக்கும் மீண்டும் தேசிய விருதுகளைப் பெற்றுக் கொடுத்தன. இளையராஜா மட்டுமல்லாது இடைக்காலத்தில் இசையமைத்த எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பின்னணி பாடியிருக்கிறார்.
௭ஸ் பி பாலசுப்பிரமணியம் 1990களில் இசையமைப்பாளர்களான தேவா, வித்யாசாகர், எம். எம். கீரவாணி , எஸ். ஏ. ராஜ்குமார், பரத்வாஜ் போன்றோரின் இசையில் நிறைய பாடல்களைப் பாடினார். ஆனால் மிகப்பெரிய வெற்றி என்று சொன்னால் அது ஏ. ஆர். ரகுமான் இசையில் பாடிய பாடல்களாகும். ஏ ஆர் ரகுமானின் முதலாவது படமான ரோஜாவில் மூன்று பாடல்களைப் பாடினார். இதற்குப் பிறகு நிறையப் பாடல்களை ரகுமானின் இசையில் நீண்ட காலமாகவும் பாடிவந்தார். புதிய முகம் திரைப்படத்தில் “ஜுலை மாதம் வந்தால்” பாடலை அனுபமாவோடு பாடினார். கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் “மானூத்து மந்தையிலே மாங்குட்டி” பாடல் நாட்டுப்புற நடையில் வித்தியாசமாகப் பாடினார். டூயட் படத்தில் ஏறத்தாழ எல்லா பாடல்களையும் பாடினார். மின்சார கனவு படத்தில் “தங்கத்தாமரை மகளே” பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது இவருக்கு 1996 ஆம் ஆண்டு கிடைத்தது. இதுதான் இவருக்கு கிடைத்த ஆறாவது தேசிய விருதாகும்.
பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் அம்சலேகாவின் இசையில் கன்னடத் திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார். அம்சலேகாவின் பருவ காலம் ஒரு வெற்றிப் படமாக அமைந்தது. நிறையப் பாடல்களை அம்சலேகாவின் இசையில் பாடினார். இவருடைய ஐந்தாவது தேசிய விருது அம்சலேகாவின் இசையில் பாடியதற்காக கிடைத்தது. கனயோகி பஞ்சக்சரி காவாயி (1995) திரைப்படத்தில் “உமண்டு குமண்டு” பாடலுக்காக, சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்திய தேசிய விருது அம்சலேகாவின் இந்துஸ்தானி இசையில் பாடியதன் மூலம் பெற்றார்.
அவர் பாடிய பாடல்கள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம்.
“இல்லம் சங்கீதம் அதில் ராகம் சம்சாரம்.'(அவன் அவள் அது).. கணவன் மனைவியின் அன்னியோன்னியத்தை துல்லியமாக புரியவைத்தபாடல்.
‘நானா பாடுவது நானா..நானும் இளவயது மானா.. எஸ் பி பி யின் தேன்குரலில் மதுரமாய் ஒலித்தபாடல். (நூல்வேலி) ‘
ஏதோ ஒரு நதியில்நான் இறங்குவதைப் போல ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே’ (சொன்னதை செய்வேன்)
மனதை ஏதோ மேஜிக் செய்த பாடல்.
‘அவளே என் காதலிகொடி நீருக்குள்ளே மலர் மேலேபெண் குளிப்பது தாமரை போலே'( பேரும் புகழும்) மனசுக்குள் கலர்கலராய் கனவுகளை வரவழைத்த பாடல்.
‘சொர்க்கத்திலே முடிவானதுசொந்தத்திலேயே உருவானது..’ (லலிதா) (எஸ்.பி..பியின்பாடலை நாம்கேட்பது சொர்க்கத்தில் முடிவானது.. போல…)
‘மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே.’. மேடையில் மட்டுமா …ஆடியதுகாற்று..நம் அனைவரது உள்ளத்திலும் தான்.
‘உன் காதோடு காதொரு சேதி சொல்லணும் கண்மனியே…’.. இப்படியாக எஸ்பிபி அவர்கள்பாடிய பாடல்களை இலங்கை வானொலிஒலிபரப்ப…
.அதைநான் கேட்டே வளர்ந்தவர்கள் பலர்.( கல்லூரி பருவத்தில் வானொலியை ‘ஆன்’ செய்துபாடல்களைக்கேட்டுக்கொண்டே அசைன்மென்ட எழுதிய காலம்ஒன்றுண்டு )
(இப்ப மட்டும் என்ன அவர் பாடலை கேட்டுக்கொண்டே தான் ..பலபேரோட.பொழுது நகர்கிறது…)
வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் (அண்ணாமலை)ஒருவன் ஒருவன் முதலாளி(முத்து)நான் பொல்லாதவன் (பொல்லாதவன்)புஞ்சை உண்டு நஞ்சை உண்டு (உன்னால் முடியும் தம்பி)வானத்தைப் பார்த்தேன் பூமியை பார்த்தேன் ( மனிதன்)ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன (தர்மதுரை)ஆடுங்கள் பாடுங்கள்(குரு)சிப்பி இருக்குது முத்தும் இருக்குது (வறுமையின் நிறம் சிகப்பு)உனக்கென்ன மேலே நின்றாய்(சிம்லா ஸ்பெஷல்)கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே (புதுப்புது அர்த்தங்கள்)..
இப்படி நிறைய தத்துவ பாடல்கள்.
மென் சோகப்பாடல்கள்பாடி பறந்த கிளி ( கிழக்கு வாசல்)உச்சி வகுடெடுத்து பிச்சிப்பூ (ரோசாப்பூ ரவிக்கைக்காரி)நானாக நான் இல்லை தாயே (தூங்காதே தம்பி தூங்காதே)தேனே தென்பாண்டி மீனே (உதயகீதம் )வந்தனம் என் வந்தனம்( வாழ்வே மாயம் )மலையோரம் வீசும் காத்து (பாடு நிலாவே )உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் (அபூர்வ சகோதரர்கள்)குயில புடிச்சு கூண்டில் அடைச்சு (சின்னதம்பி )வாசமில்லா மலரிது( ஒரு தலை ராகம் )என்னை காணவில்லையே நேற்றோடு (காதல் தேசம்)காதல் ராகங்கள்மடை திறந்து தாவும் நதியலை தான் (நிழல்கள்) பனி விழும் மலர் வனம் (நினைவெல்லாம் நித்யா)நீதானே எந்தன் பொன் வசந்தம் (நினைவெல்லாம் நித்யா)பச்ச மலப் பூவு நீ உச்சி மல தேனு (கிழக்குவாசல் )நம்ம ஊரு சிங்காரி (நினைத்தாலே இனிக்கும்) காதலின் தீபம் ஒன்று (தம்பிக்கு எந்த ஊரு )நீல வான ஓடையில் (வாழ்வேமாயம் )வான் நிலா நிலா அல்ல (பட்டினப்பிரவேசம் )பாடும் போது நான் தென்றல் காற்று (நேற்று இன்று நாளை)அவள் ஒரு நவரச நாடகம்( உலகம் சுற்றும் வாலிபன் )போவோமா ஊர்கோலம் (சின்னத்தம்பி) வெள்ளி மலரே வெள்ளி மலரே (ஜோடி) இதழில் கதை எழுதும் நேரமிது (உன்னால் முடியும் தம்பி) இது ஒரு பொன்மாலை பொழுது (நிழல்கள்) இளையநிலா பொழிகிறது (பயணங்கள் முடிவதில்லை)சுந்தரி கண்ணால் ஒரு சேதி (தளபதி) மண்ணில் இந்த காதலன்றி (கேளடி கண்மணி)*எவர்க்ரீன்பாட்டு கள்இளமை இதோ இதோ என்னடி மீனாட்சி எங்கேயும் எப்போதும் நம்ம ஊரு சிங்காரி.
*மாஸ்பாடல்கள் என் பேரு படையப்பா ராக்கம்மா கையத்தட்டு வந்தேன்டா பால்காரன் நான் ஆட்டோக்காரன்ஆத்தா ஆத்தோரமா வாரியா ராம ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்..இது எல்லாம் ஒரு சாம்பிள் தான் நினைவ லைகளில்..இன்னும் நிறைய பாடல்கள்…எதை மறப்பது எப்படி மறப்பது..
(வானொலியை ஆன் செய்தாலே பாடும் நிலாவின் பாடல்கள் தான். கலந்துகட்டி வருகின்றன காற்றலைகள் மூலமாக நேரலையாக )
அன்பே சங்கீதா’ படத்தில் இடம்பெற்ற ‘சின்ன புறா ஒன்றுஎண்ணக் கனாவினில்வண்ணம் கெடாமல் வாழ்கின்றது.. நினைவில் உலவும் நிழல் மேகம் நூறாண்டுகள் நீ வாழ்கவே.. நூறாண்டுகள் நீ வாழ்கவே…’ இந்தப் பாடலைப் பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா?
.மனித உயிரை உறைய வைக்கும் சக்தி இப்பாடலுக்கு உண்டு. உயிர்ப்போடு பாடியிருப்பார் எஸ்பிபி .இந்தப் பாடலின் ‘ஹம்மிங்’ கேட்டாலே நம்மையறியாமல் விழிகளில் கண்ணீர் வரும்.
மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையை தூது விட்டேன் அவள் முகவடிவை மனம் பார்த்த பின்னே அந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை..”இரு விழி கவிதை தினசரி படித்தேன் பொருள் அதை அறிய வழியேதுமில்லை…”என்ன ஒரு கவித்துவமான வரிகள் .நிதானமான மெட்டு .ஆழ்ந்த அர்த்தம்… இனிய இசை ..மனம் உருகும். எஸ்பிபி யின் குரல் இனிமையை என்னவென்று சொல்வது.
“ஆடை ஒன்றை எடுத்து
தென்றலுக்கு உடுத்த
மின்னலென நெளிந்த
மேனகையோ..
செங்கரும்புச்சாறும்
செவ்விதழில் தானே
இனிப்பெனும் சுவையைக்
கற்றுக் கொண்டது…ஹாஆஆஆ “பாடலின் கிடார்இசை வயலின் இசையோடு கலந்து பாடும்நிலா பாலு குழைந்து நெளிந்து இழைந்(த்)து பாடியதைக் கேட்கும்போது அந்த பௌர்ணமியை ரசிக்க யாருக்குத்தான் மனம் வரும்?
காதல் எப்படி உருவாகும் என்பதற்கு… “சொல்லாமல் தானே இந்த மனசு தவிக்குது
இந்த மனசு தவிக்குதுகண்ணால தானே
இந்த காதல் வளருதுஇந்தக் காதல் வளருதுஉள்ளமோ நினைக்குதுஉதடு தான் மறைக்குது..”என்ற பாடலைச் சொல்லலாம் . காதலை கண்கள் வழியாக இதயத்துக்கு கொண்டு சென்றிருப்பார் பாடும்நிலா பாடலைப் பாடியதன் மூலம். டிரம்ஸ், மிருதங்கம், வீணை என கலந்து கட்டி ஒலிக்கும்.இந்தப் பாடலின் வெற்றிக்கு , ,பாடும் நிலா பாலு வின்குரல் ஒரு காரணம் என்றால் மிகையில்லை
“மூடி வெச்ச மொட்டு பூவுக்குள்ளவண்டு வந்தா வழி கிடைக்குமாவண்டின் இதழ் மொட்டில் பட்டுவிட்டால்மொட்டின் இதழ் விட்டு கொடுக்குமே “கவித்துமான வார்த்தைகளை எளிமையாக புரியும் வண்ணம் டி ஆர் இசையமைத்ததை பாடும் நிலா எவ்வளவு அழகாக பாடி இருக்கிறார் பாருங்கள்.. காதலின் தவிப்பை அழகாய்..பாடி உணர்த்துவதில்… பாடும் நிலா பாலுவிற்கு நிகர் பாலுதான்.பல்லவ நாட்டு ராஜகுமாரிக்குபருவம் 18அவள் பழமுதிர்சோலையில்தாமரைப் போலே மலர்ந்ததுஒரு மொட்டு..
“வி குமார் இசையில் எஸ்.பி.பியின் இளமையான குரலில் பாடல் ச்சும்மா பட்டையைக் கிளப்பும். (பாடல் முழுதும் ஹார்மோனியம் தென்றலாய் தவழ்ந்து… நம்மை உரசிச் செல்லுவது தனிக்கதை.)”நான் என்றால் அதுஅவளும், நானும்.. அவள் என்றாள் அது நானும், அவளும்.. yes the whole true… நான் சொன்னால்… அது, அவளின் வேதம்.. அவள் சொன்னால்… அதுதான் என் எண்ணம்.. I am nothing, but trueஅதுதான் என் எண்ணம்…”
‘சூரியகாந்தி’ படத்தில் ஜெயலலிதாம்மாஎஸ்பிபி இணைந்து பாடும் பாடல். காட்சியில் ஜெயலலிதா அவர்களின் பேச்சுடன் கூடிய பாட்டு, பாடும் நிலாவின் இனிமையான குரல் , ஒவ்வொரு இடத்திலும் கொஞ்சுவது போலவே இருக்கும்.(. கணவன் மனைவி இருவரும் மனம் ஒன்றிணைந்து வாழ வாழ்க்கை இனிக்கும் என்பதை சொல்லாமல் சொல்லும் இந்த பாடலின் வரிகள்.)
“சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன் சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்நடமாடும் கலைக்கூடம்விழி ஜாலத்தில் உருவானதோ”…அழகான பாடல் (அந்த காலத்தில் சிலோன் ரேடியோவின் அபிமான பாடலிது) எஸ்பிபி அவர்கள் மெய் மறந்து பாடி இருப்பார். (வி குமார் அவர்கள் இசை நம்மைத் தாலாட்டும்)”
மதனோற்சவம் ரதியோடு தான்ரதிதேவியோ பதியோடு தான்உயிரோவியம் உனக்காகத்தான்உடல் வண்ணமே அதற்காகத்தான்” என்று இளமை ததும்ப வாலி அவர்கள் எழுதிய பாடலை வி. குமார் அவர்கள் தன் கிடார் இசையின் மூலம் மெருகேற்ற எஸ்பிபி அவர்கள் அழகாக இனிமையாய் எளிமையாய் பாடி இருப்பார். கேட்க கேட்க திகட்டாத பாடல் இது.””
மீனாடும் கண்ணில் விழுந்துநான் ஆடவோ..தேனாடும் செவ்விதழ் தன்னில் நீராடவோ”இசை அமிர்தம் இந்தப் பாடல்.இந்தப் பதிவை எப்படியோ உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லணும்ன்னு ஆரம்பித்தாகிவிட்டது. ஆனால் எப்படி முடிப்பது? எந்தப் பாடலைக் கொண்டு முடிப்பது?எந்தப் பாடலைக் கொண்டு முடித்தால் அது சரியா இருக்கும் ?தெரியவில்லை(யே)
“நலம் வாழ எந்நாளும் வாழ்த்துகள்..தமிழ் கூறும் பல்லாண்டு
என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளந்தென்றல் உன் மீது பண்பாடும்… நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்…””நிலவினை நம்பி இரவுகள் இல்லை விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை…” ( உடனடியாக) தன்னம்பிக்கை தரும் உற்சாகம் தரும் வார்த்தைகள் . இசைஞானியின் இசையில்.. நீங்கள் பாடிய இந்தப் பாடல் பாடல் ஒலிக்காத இடங்களே இல்லைஎனலாம்.குரலின் இனிமையும் வரிகளின் வலிமையும் பாடலின் அழகு…”மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம் மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்…”உண்மை வரிகள். நம் எண்ணங்களை வண்ணங்களாக திரையில்ஓடவிட்டஒளிக் கவிஞனின் அற்புத படைப்பில் . “மறுபடியும்” “மறுபடியும்” கேட்க தோன்றும் ‘நலமான’பாடலைக் கொண்டு நிறைய நிறைய
.
எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் எங்களுக்கு நீங்கள் அதே அழகு பாடும் நிலா பாலுவாகவே எங்கள் நெஞ்சில் இருப்பீர்கள்.நீங்கள் பாடிய ஒவ்வொரு பாடல்களும் இசைப்பிரியர்களுக்கு திருக்குறளைப் போல..