No menu items!

பணக்கட்டுகளின் மீது படுத்திருந்தார் சில்க்  – டிஸ்கோ சாந்தி பரபரப்பு

பணக்கட்டுகளின் மீது படுத்திருந்தார் சில்க்  – டிஸ்கோ சாந்தி பரபரப்பு

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத சில நட்சத்திரங்களில்  முக்கியமானவர் நடிகை சில்க் ஸ்மிதா. கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது அவருடன் நெருக்கமான நட்பு வைத்திருந்ந்த நடிகைகள் சிலர் சில்க் ஸ்மிதா பற்றி தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.  அதில் நடிகை டிஸ்கோ சாந்தி பேசியவை இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.  டிஸ்கோ சாந்தி கூறியதாவது,

சில்க் ஸ்மிதா மிகவும் நல்லவர். சகஜமாகப் பேசுவார். நான் அக்கா என்று அழைப்பேன். அவரும் எல்லா விஷயங்களையும்  என்னிடம் பகிர்ந்து கொள்வார். சில்க் ஸ்மிதா அந்தக் காலத்திலேயே லட்சங்களில் சம்பளம் வாங்குவார். ஒரு நாளைக்கு அவர் ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை சம்பளம் வாங்கினார். ஆனால் நான் அந்த நிலைக்கு வர பத்து வருடங்கள் ஆனது. அவரது வாழ்க்கை ஆடம்பரமாக இருந்தது. மாதம் ரூ.5 லட்சம் வாடகை கொடுத்து வாடகை வீட்டில் வாசித்தார். சொந்த வீடு வாங்கலாமே என்றால், கேட்க மாட்டார்.

சில்க் ஸ்மிதா பணக் கட்டுகளில் படுப்பார். இதை நான் முதலில் பார்த்தபோது மிரண்டு போய் விட்டேன். நான் வாய்ப்புகளுக்காக அலைந்தபோது தன்னை யாரும் ஆதரிக்கவில்லை. அதனால்தான் இப்போது பணக் கட்டுகளில் படுத்திருக்கிறேன் என்பார். படப்பிடிப்பில் சில்க் ஸ்மிதாவை அனைவரும் மதிப்பார்கள் என்று டிஸ்கோ சாந்தி கூறினார்.

சிலக் ஸ்மிதா 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார். அவரது முகம் இருந்தால் படத்தை விநியோகஸ்தர்கள் வாங்குவார்கள் என்ற நிலையை சில்க் ஸ்மிதா கொண்டு வந்தார்.  இதனால் படத்தில் அவரை நடிக்க வைத்து ஒரு பாடலை எடுத்தார்கள். சூப்பர் ஸ்டார் அந்தஸ்திருந்த ரஜினிகாந்த் கூட அவர் படத்தில் சில்க் ஸ்மிதா பாடல் இருக்க வேண்டும் என்று விரும்பியதாக சொல்வதுண்டு. அப்படித்தான் தங்கமகன் படத்தில் அடுக்கு மல்லிகை அது ஆள் பிடிக்குது.. என்ற பாடலையும், அடுத்த வாரிசு படத்தில் ஆசை நூறு வகை.வாழ்வு நூறு சுவை.. என்ற பாடலையும் வைத்தார்கள். இப்படி முக்கியமான நாயகர்களுக்கு புகழ் பெற்றிருந்தார் சில்க். இப்போது வரைக்கும் அவரை நினைவுபடுத்தி இணையத்தில் அடிக்கடி புதிய தகவல்களையும், தங்கள் அனுபவங்களையும் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். இது வேறு எந்த நடிகைக்கும் கிடைக்காத ஒரு விஷயம்.

அடுத்த தலைமுறையும் நடிகையாக சில்க் இருக்கிறார். இன்று டிஸ்கோ சாந்தி அவர் பணத்தின் மேல் படுத்திருப்பார் என்ற தகவல்  இந்த தலைமுறையினருக்கு  அது தவறாக நினைக்கத்தோன்றும். ஆனால் சில்க் வறுமையின் பிடியில் இருந்து தன்னை நடிகையாக மாற்ற பெரும் போராட்டத்தை சந்தித்தார். எந்த பணத்திற்காக தான் அவமானப்படுத்தப் பட்டோமோ, எந்த பணம் இல்லாமல்  பட்டினி கிடந்தோமோ அந்தப் பணத்தை தான் அடைந்து விட்டோம் என்கிற மனோபாவத்தைக் காட்டவே அவர் அவ்விதமாக நடந்து கொண்டார் என்கிறார்கள்.  அடுத்தவர்களுக்கு உதவும் குணம் உள்ள சில்க் தன்னிடம் உதவி என்று யார் கேட்டாலும் கொடுத்து உதவியிருக்கிறார். அவரது பிறந்த நாளில் இப்போதும் இணையத்தில் ரசிகர்கள் கொண்டாடுதற்கு இதுதான் முதல் காரணமாக இருக்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...