No menu items!

உத்தராகண்டில் மீட்புப் பணிக்கு சவாலாக கனமழை

உத்தராகண்டில் மீட்புப் பணிக்கு சவாலாக கனமழை

உத்​த​ராகண்​டில் மேகவெடிப்​பால் பெரு​வெள்​ளம் ஏற்​பட்ட பேரிடரை தொடர்ந்து இது​வரை சுமார் 150 பேர் மீட்​கப்​பட்​டுள்​ளனர்.

உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் கடந்த சில வாரங்​களாக கனமழை பெய்து வரு​கிறது. இந்​நிலை​யில் உத்​தர​காசி மாவட்​டம், இமயமலைப் பகு​தி​யில் நேற்று முன்​தினம் மேகவெடிப்​பால் திடீர் பெரு​வெள்​ளம் ஏற்​பட்​டது.

சார்​தாம் யாத்​திரை தலங்​களில் ஒன்​றான கங்​கோத்ரி அரு​கில் இந்​தப் பெரு​வெள்​ளம் ஏற்​பட்​ட​தில் இக்​கோ​யிலுக்கு செல்​லும் வழியில் உள்ள தரளி என்ற கிராமம் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டது.

இந்த கிராமத்​தில் பல ஓட்​டல்​கள், தங்​கும் விடு​தி​கள் செயல்​பட்டு வந்​தன. மேலும் 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் இங்கு வசித்து வந்​தனர். இந்​நிலை​யில் பெரு​வெள்​ளத்​தில் 5 பேர் உயிரிழந்த நிலை​யில் பலர் படு​கா​யம் அடைந்​தனர். மேலும் ஏராள​மானோரை காண​வில்​லை. இதையடுத்து அங்கு மீட்​புப் பணிகள் முடுக்​கி​விடப்​பட்​டன.

இதுகுறித்து போலீஸ் டிஐஜி மொசென் ஷாஹேதி நேற்று கூறிய​தாவது: தரளி பகு​தி​யில் ராணுவம், தேசிய, மாநில பேரிடர் மீட்பு படை​யினர் மற்​றும் இந்தோ திபெத் எல்​லைக் காவல் படை​யினர் மீட்பு பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். அவர்​கள் இது​வரை சுமார் 150 பேரை மீட்​டுள்​ளனர்.

ரிஷிகேஷ் – உத்​தர​காசி நெடுஞ்​சாலை​யில் நிலச்​சரிவு ஏற்​பட்​டுள்​ள​தால் தரளி கிராமத்​துக்கு கூடு​தல் மீட்​புக்​குழுக்​கள் செல்​வ​தில் தாமதம் ஏற்​பட்​டுள்​ளது. தரளி கிராமத்​துக்கு அரு​கில் உள்ள ஹர்​சில் பகு​தி​யில் 11 ராணுவ வீரர்​களை காணவில்​லை. பாதிக்​கப்​பட்ட பகு​தி​களுக்கு மிக அரு​கில் தேசிய பேரிடர் மீட்பு படை​யின் 3 குழுக்​கள் உள்​ளன. பாதை சீரானவுடன் அவர்​கள் அவர்​கள் அங்கு செல்​வார்​கள். இவ்​வாறு அவர் கூறி​னார்.

உத்​த​ராகண்​டில் கின்​னார் – கைலாஷ் யாத்​திரை பாதை​யில் 413 பக்​தர்​கள் மீட்​கப்​பட்​டுள்​ள​தாக இந்​தோ-​திபெத் எல்லை காவல் படை தெரி​வித்​துள்​ளது. இதற்​கிடை​யில் உத்​த​ராகண்ட் பெரு​வெள்​ளம் மற்​றும் கடும் நிலச்​சரிவுக்கு பிறகு கேரளாவை சேர்ந்த சுற்றுலாப் பயணி​கள் 28 பேரை காண​வில்லை என உறவினர்​கள் தெரி​வித்​தனர். இந்த 28 பேரில் 20 பேர் மகா​ராஷ்டி​ரா​வில் குடியேறிய​வர்​கள். மற்​றவர்​கள் கேரளா​வின் பல்​வேறு மாவட்​டங்​களை சேர்ந்​தவர்​கள் என கூறப்​படு​கிறது.

இதுகுறித்து கொச்​சி​யில் உறவினர் ஒரு​வர் கூறுகை​யில், “இவர்​கள் 28 பேரும் செவ்​வாய்க்​கிழமை காலை 8.30 மணி​யள​வில் உத்தரகாசி​யில் இருந்து கங்​கோத்​ரிக்கு புறப்​பட்​டனர். அவர்​கள் செல்​லும் வழி​யில் நிலச்​சரிவு​கள் ஏற்​பட்​டுள்​ளன. பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடிய​வில்​லை. 10 நாள் உத்​த​ராகண்ட் சுற்​றுலா​வுக்கு ஏற்​பாடு செய்த ஹரித்​வார் பயண நிறு​வனத்தா​லும் இவர்​களின் இருப்​பிடம் குறித்து எந்த தகவலும் அளிக்க முடிய​வில்​லை’’ என்று கூறி​னார்.

இமாச்​சலில் நிலச்​சரிவு: இமாச்​சலில் சிம்​லா, மண்​டி, குல்​லு, தரம்​பூர் உள்​ளிட்ட பல்​வேறு மாவட்​டங்​களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்​பட்ட நிலச்​சரிவு​கள் காரண​மாக 4 தேசிய நெடுஞ்​சாலைகள் உட்பட 617 சாலைகளில் போக்​கு​வரத்து துண்டிக்கப்​பட்​டுள்​ளது.

இவற்​றில் மண்டி மாவட்​டத்​தில் 377 சாலைகள், குல்லு மாவட்​டத்​தில் 90 சாலைகளில் போக்​கு​வரத்து தடைபட்டுள்​ளது. கனமழை நிலச்​சரிவு காரண​மாக கின்​னார் – கைலாஷ் யாத்​திரை நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ளது. பல மாவட்டங்களில்​ பள்​ளி, கல்லூரிகளுக்கு விடு​முறை அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

மீட்புப் பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் புஷ்கர் சிங் தாமி: உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று ஆய்வு செய்தார்.அப்போது அரசு சார்பில் இயன்ற அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என அப்பகுதி மக்களிடம் உறுதி அளித்தார். மேலும் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் இயன்ற அனைத்து முயற்சிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலையில் முதல்வர் தாமியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது தரளி பகுதியில் நடைபெறும் தீவிர மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் தாமி எடுத்துரைத்தார்.

‘‘அங்கு சில இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்வது மீட்புப் பணிக்கு சவாலாக உள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்புடைய அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய உதவி கிடைப்பதை உறுதி செய்து வருகின்றன’’ என்றும் தாமி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...