சீனாவில் மக்கள் இவ்வளவு வசதியாக வாழ்கிறார்களே என இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் ஆகாஷ் பன்சால் பதிவிட்டுள்ளார்.
சீனாவுக்கு சென்ற இந்திய தொழிலதிபர் ஒருவர் அங்குள்ள போக்குவரத்து கட்டமைப்புகளையும் அதிவேக ரயில்களையும் பார்த்து பிரமித்து தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
உலக மக்கள் தொகையில் இரண்டாவது இடம் வகிக்கும் நாடான சீனா, உலக அளவில் தகவல் தொழில் நுட்பத்தில் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. உலக வல்லராசக அறியப்படும் அமெரிக்காவுக்கே சவால் விடுக்கும் வகையில் டெக் துறையில் சீனா கண்டு வரும் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது.
சீனாவின் உள்கட்டமைப்பு வசதி
அதுபோக போக்குவரத்து துறையில் சீனாவின் உள்கட்டமைப்பு வசதி வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு வளர்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக மணிக்கு 400 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய ரயில்களும் சீனாவில் இயங்கி வருகிறது. இதனால், ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள நகரங்களுக்கு கூட ஒரே நாளில் சென்று விட்டு வந்து விடும் அளவுக்கு அந்நாட்டில் போக்குவரத்து உள்கட்டமைப்பு வளர்ந்துள்ளது.
சீனாவுக்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டவர்கள் பலரும் சீனா 2075 ஆம் ஆண்டில் வாழ்ந்து வருகிறது என சொல்லும் அளவிற்கு அங்குள்ள தொழில் நுட்பங்கள் இருப்பதாக கூறுவதை பார்க்க முடியும். அந்த வகையில்தான் தற்போது, இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் ஆகாஷ் பன்சால் சீனாவுக்கு சென்றுவிட்டு தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.
1,600 கிலோ மீட்டர் பயணம் செய்தார் ஆகாஷ் பன்சால் கூறியிருப்பதாவது:- சீனாவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்குக்காக நான் சென்று இருந்தேன். மூன்று மணி நேரம் நடைபெற்ற அந்த மீட்டிங்கிற்காக 1,600 கிலோ மீட்டர் பயணம் செய்தேன். அதுவும் வெறும் 4.5 மணி நேரத்தில் சென்றுவிட்டு வந்தேன். மொத்தம் பயண செலவு ரூ.8 அயிரம் ஆனது. அதாவது 800 கிலோ மீட்டருக்கு ரூ.4 ஆயிரம் வாங்கினார்கள்.
இவ்வளவு தூரம் பயணித்தும் இரவு தூங்குவதற்கு நான் தங்கியிருந்த இடத்திற்கே வந்துவிட்டேன். சீனாவில் வாழ்க்கை எவ்வளவு வசதியாக உள்ளது என்பதை இது காட்டுகிறது. சீனாவின் ரயில் நிலையமும் சிறப்பாக உள்ளது . ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடத்திற்கு முன்னால் கூட நீங்கள் செல்லலாம். அனைத்து கேட்களும் திறந்து இருக்கின்றன.