No menu items!

பலாத்காரம் செய்ய முயன்ற தயாரிப்பாளர் – நடிகை சர்மிளா சொல்லும் அதிர்ச்சி தகவல்

பலாத்காரம் செய்ய முயன்ற தயாரிப்பாளர் – நடிகை சர்மிளா சொல்லும் அதிர்ச்சி தகவல்

ஹேமா கமிஷன் அறிக்கை மலையாளத் திரையுலகில் புயலை கிளப்பியுள்ள நிலையில் பிரபல மலையாள நடிகை சர்மிளா, தன்னையும் சிலர் சூட்டிங்கின்போது பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார்.

நடிகை சர்மிளா, சென்னையைச் சேர்ந்தவர். தன்னுடைய ஐந்து வயதில் தொடங்கி, கிட்டதட்ட 40 ஆண்டுகளாக நடித்து வருகிறவர். மலையாள சினிமாக்களில் ஹீரோயினாக 38 படங்களில் நடித்திருக்கிறார். மலையாளம் தவிர தமிழிலும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர், சமீபத்தில் அளித்த பேட்டியில் படப்பிடிப்பில் தான் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதில், ‘’காலம் மாறிப்போச்சு’ என்னும் தமிழ்ப் படத்தின் ரீமேக் மலையாளத்தில் எடுத்தார்கள். அதன்பெயர் ‘அர்ஜூனன் பிள்ளையும் அஞ்சு மக்களும்’. அந்தப் படத்தில் நான் நடித்திருந்தேன். அதில் ஒரு பாடல் எடுப்பதற்காக படக்குழு பொள்ளாச்சிக்கு வந்திருந்தது. அந்தப் பாடல் முடிந்து பேக்கப் ஆகும் நாளில், படத்தின் தயாரிப்பாளர் மற்றும் அவரது நண்பர்கள் 8 பேர் என்னைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்.

படம் முடிந்து போகப்போகும்போது இயக்குநர்கிட்டேயும், தயாரிப்பாளர்கள்கிட்டேயும் சொல்லிவிட்டுக் கிளம்புறது வழக்கம். அந்த நேரம் சொல்லிட்டுக் கிளம்புறதுக்காக நானும் என்னோட அசிஸ்டென்ட் பெண்களும் போயிருந்தப்போ, எங்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி பண்ணுனாங்க.

அது பொள்ளாச்சி என்பதால், நான் வெளியே ஓடிப்போய் ஆட்டோ டிரைவர்கிட்ட சொல்லி, என் அப்பாவின் நண்பர்கள் வீட்டுக்கு கூட்டிட்டுப்போகச் சொன்னேன். ஆட்டோ டிரைவர்களே முழுமையாக இறங்கி என்னைக் காப்பாத்துனாங்க. என் அப்பாவின் நண்பர்கள் அப்போது பொள்ளாச்சியில் இருந்தாங்க. அப்போது எல்லாம் போன் வசதி கிடையாது. பிறகு, எஸ்.டி.டி கால் புக் செய்து அப்பாகிட்ட போனில் பேசி, அதன்பின், அப்பா வந்து ராஜாத்தி அம்மாள்கிட்ட சொல்லி, அதுக்கப்புறம் போலீஸ் வந்து, அவங்களை பிடிச்சு ஜெயிலில் போட்டோம்.

இந்த ஹேமா கமிட்டி மாதிரி அப்பவே இருந்திருந்தால் ஈஸியாக இருந்திருக்கும். தமிழ்நாட்டில் எந்தவொரு பிரச்னையும் வரவில்லை. தெலுங்கு படத்தில் நடிக்கும்போது படத்தின் தயாரிப்பாளர்களே, இயக்குநர்களைக் கண்டிச்சு, தவறாகப் பேசக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க.

பல இடங்களில் பாலியல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், எங்க நடிகைகளிலேயே சிலர் இப்போது அட்ஜெட்மென்ட் பண்ணிப்போய் பணம் சம்பாதிச்சால்தான் என்ன தவறு இருக்கு என்று மாற்றுக் கருத்துடன் தான் இருக்கிறார்கள். இப்படி பிரிஞ்சிருக்கும்போது எந்தக்கமிட்டி ஃபார்ம் பண்ணுனாலும் ஒன்னும் செய்யமுடியாது. இந்த மாதிரியான விவகாரங்களில் ஒற்றுமையாக இருந்தால் தான் தீர்வுகிடைக்கும்’’ என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...