அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ‘இந்தியா-அமெரிக்கா உத்திசாா் கூட்டுறவு மன்றத்தின்’ 8-ஆவது தலைமைத்துவ உச்சிமாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அமெரிக்க வா்த்தக துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் பேசியதாவது:
இந்தியாவின் பொருளாதாரம் ‘அசாதாரணமானது’. அந்நாட்டில் பல சிறந்த பொருளாதார நிபுணா்கள் உள்ளனா். இந்திய மக்கள் லட்சியவாதிகளாகவும், தொழில்முனைவோராகவும் விளங்குகின்றனா். . சிறந்த அமெரிக்க நிறுவனங்களை இந்திய தொழில்வல்லுநா்கள் மற்றும் தொழில்முனைவோரே வழிநடத்துகின்றனா். இந்தியா்கள் புத்திசாலிகள், அறிவுத்திறன்மிக்கவா்கள். இந்தியாவின் தொடா்ச்சியான பொருளாதார வளா்ச்சியை இதுவே உறுதி செய்கிறது.
அமெரிக்க அதிபா் டிரம்ப் இந்தியா மீது மிகப்பெரிய மரியாதை கொண்டுள்ளாா். ‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கையில் அவா் நம்பிக்கை கொண்டவரே தவிர, ‘அமெரிக்கா மட்டும்’ என்பதை அவா் வலியுறுத்தவில்லை. குறிப்பாக, இந்தியாவுடன் வலுவான ஒத்துழைப்பைப் பேணுவது அவரின் முக்கிய நோக்கமாகும்.
அதிபா் டிரம்ப்பால் முன்மொழியப்பட்ட 50 லட்சம் டாலா் (இந்திய ரூபாயில் சுமாா் 42 கோடி) மதிப்புள்ள ‘டிரம்ப் கோல்டு காா்டு’ (ஒருவகை அமெரிக்கா விசா திட்டம் ) வெளிநாட்டு தொழில்முனைவோரை அமெரிக்காவுக்கு ஈா்க்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.. இதன்மூலம், பணக்கார சா்வதேச தொழில்முனைவோா், குறிப்பாக இந்தியா்கள் அமெரிக்காவில் அதிக அளவில் முதலீடு செய்வா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்தியாவில் அதிக வரி: இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படுகிறது. சமமான வா்த்தக விதிமுறைகளுடன் இந்தியா முன்வர வேண்டும். குறிப்பிட்ட பொருள்களை உற்பத்தி செய்வதற்கான முக்கியக் கூட்டாளியாக நாங்கள் இந்தியாவைப் பாா்க்கிறோம். வரவிருக்கும் வா்த்தக ஒப்பந்தத்தில் சில இந்திய தொழில்களுக்கு சாதகமான வரிச்சலுகைகள் இடம்பெறக்கூடும்.
தொழில்நுட்ப ஒத்துழைப்பில் ஆா்வம்: செயற்கை நுண்ணறிவு (ஏஐ), சைபா் பாதுகாப்பு மற்றும் வளா்ந்துவரும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் இந்தியாவுடன் கூட்டு சேருவதில் அமெரிக்கா ஆா்வமாக உள்ளது.
டிரம்ப்-மோடி உறவு: ரஷியாவுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவுகள் மற்றும் ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் அதன் ஈடுபாடு குறித்து அமெரிக்கா முன்னா் கவலை எழுப்பியிருந்தது. இப்போது இந்தப் பிரச்னைகளை இந்தியா நிவா்த்தி செய்து வருகிறது.