No menu items!

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் தீவிரவாதிகள் கைது – டிஜிபி சங்​கர் ஜிவால்

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் தீவிரவாதிகள் கைது – டிஜிபி சங்​கர் ஜிவால்

பல்​வேறு வழக்​கு​களில் தேடப்​பட்டு வந்த 3 தீவிரவா​தி​கள் 30 ஆண்​டு​களுக்​குப் பிறகு அடுத்​தடுத்து கைது செய்​யப்​பட்​டனர்.

இதுதொடர்​பாக நேற்று செய்​தி​யாளர்​களிடம் டிஜிபி சங்​கர் ஜிவால் கூறிய​தாவது: தமிழகத்​தில் ஆடிட்​டர் ரமேஷ் கொலை உள்ளிட்ட பல்​வேறு வழக்​கு​களில் தொடர்​புடைய போலீஸ் பக்​ருதீன், கூட்​டாளி​களான பன்னா இஸ்​மா​யில், பிலால் மாலிக் ஆகியோர் சிக்​கினர்.

இவர்​களு​டன் தொடர்​புடைய தீவிரவாதி நாகூரைச் சேர்ந்த அபுபக்​கர் சித்​திக்கை காவல்​துறை​யினர் தேடி வந்​தனர். முன்​ன​தாக இவர், 2012-ல் வேலூர் மருத்​து​வர் அரவிந்த்​ரெட்டி கொலை வழக்கு மற்​றும் 2013-ல் பெங்​களூரு பாஜக அலு​வல​கம் அருகே குண்டு வெடித்த வழக்கு உட்பட மேலும் பல வழக்​கு​களில் முக்​கியப் பங்​காற்​றி​னார்.

அவர் மீது தமிழகத்​தில் 5 வழக்​கு​களும், கேரளா​வில் 2 வழக்​கு​களும், கர்​நாட​கா, ஆந்​தி​ரா​வில் தலா ஒரு வழக்​கு​களும் உள்​ளன. இதனால், அபுபக்​கர் சித்​திக்கை அம்​மாநில போலீ​ஸாரும், மத்​திய புல​னாய்வு அமைப்​பு​களும் 30 ஆண்​டு​களாகத் தேடி வந்​தன. இவர் உட்பட மேலும் சிலரை கைது செய்ய ‘ஆபரேஷன் அறம்’ என்ற சிறப்பு நடவடிக்கை மூலம் தேட தொடங்கினோம்.

தீவிரவாதி அபுபக்​கர் சித்​திக்​கின் பழைய புகைப்​படங்​களை ஏ.ஐ. தொழில்​நுட்​பம் மற்​றும் தொழில் நுட்ப நிபுணர்​களின் ஒத்​துழைப்​புடன் தேடு​தல் பணி முடுக்கி விடப்​பட்​டது. இந்​நிலை​யில், ஆந்​திர மாநில போலீ​ஸார் உதவி​யுடன் கடப்பா அருகே அவரை அண்​மை​யில் கைது செய்​தோம்.

அப்​போது, அவரது வீட்​டிலிருந்து வெடிபொருட்​கள், ஏராள​மான மின்​னணு பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. இதே​போல், பல்வேறு வழக்​கு​களில் தலைமறை​வாக இருந்த மற்​றொரு தீவிரவா​தி​யான முகமது அலியை​யும் ஆந்​தி​ரா​வில் கைது செய்​தோம். கடந்த 1998-ம் ஆண்டு கோவை​யில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்​கில் அல்​-உம்மா தீவிரவாத இயக்​கத்​தைச் சேர்ந்த பாஷா உட்பட 160-க்​கும் மேற்​பட்​டோர் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

இவ்​வழக்​கில் கோவை உக்​கடம் பிலால் காலனியைச் சேர்ந்த சாதிக் என்ற ராஜா என்ற டெய்​லர் ராஜா 1996 முதல் தலைமறை​வாக இருந்து வந்​தார். இவரை ‘ஆபரேஷன் அகழி’ என்ற சிறப்பு நடவடிக்கை மூலம் தேடினோம். ஏ.ஐ. தொழில் நுட்​பம் மற்​றும் நுண்​ணறிவு உளவு தகவல்​களை அடிப்​படை​யில் கர்​நாடக போலீஸாரின் உதவி​யுடன் விஜய் ​பு​ரா​வில் கடந்த 9-ம் தேதி அவரை கைது செய்​தோம்.

இவர்​கள் மளி​கை, தையல், துணிக்​கடை, ரியல் எஸ்​டேட் உள்ளிட்ட தொழில்​கள் செய்து வந்​துள்​ளனர். அவர்​களது உண்மை​யான பெயர், முகவரியை வெளிப்​படுத்​தாமல் வேறு பெயர்​களை மாற்றி அடை​யாள அட்​டைகளை​யும் வைத்​துள்​ளனர். டெய்​லர் ராஜா மட்​டும் அல் உம்மா தீவிரவாத அமைப்​புடன் தொடர்​பில் இருந்​துள்​ளார்.

3 பேரை​யும் காவலில் எடுத்து விசா​ரிக்க உள்​ளோம். தமிழக போலீ​ஸாரின் சிறப்​பான செயல்​பாடு​களால், வரும் காலங்​களில் தமிழகத்​தில் தீவிரவாத செயல்​பாடு​கள் மற்​றும் கடுமையான குற்​றங்​கள் நடக்​காது என்ற நிலை உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...