அமரன் படத்தின் வெற்றிக்குபின், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் மதராசி படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அந்த படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அடுத்ததாக, சுதா இயக்கும் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் ரிலீஸ். இதற்கு அடுத்து சிவகார்த்திகேயனை இயக்க பலர் காத்திருக்கிறார்கள். வெங்கட்பிரபு உள்ளிட்ட பல இயக்குனர்கள் கதையுடன் சுற்றி வருவதாக தகவல்
இந்நிலையில், தனது அடுத்த படத்தை சிவகார்த்திகேயன் முடிவு செய்துவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார் என்று கூறப்படுகிறது. இப்போது ரஜினி நடிக்கும் கூலி படத்தை இயக்கி வருகிறார் லோகஷ். அந்த படத்தை முடித்துவிட்டு கைதி2, அதற்கடுத்து சிவகார்த்திகேயன் படத்துக்கு செல்கிறார் என தகவல். அந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கப்போகிறாராம்.
தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த 3 படத்தில்தான் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் சிவகார்த்திகேயன். இப்போது ஸ்ருதிஹாசன் ஜோடியாகவே நடிக்கப்போகிறார் என்பதுதான் லேட்டஸ்ட் கோடம்பாக்கம் டாக். அந்த படத்தில் சிவகார்த்திகேயன் சம்பளம் 100 கோடியை தொடும் என்றும் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வர உள்ளது. படத்தை தயாரிப்பது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.