No menu items!

கோலிவுட் பிரபலங்களிடம் போலீ​ஸார் தீவிர விசா​ரணை

கோலிவுட் பிரபலங்களிடம் போலீ​ஸார் தீவிர விசா​ரணை

நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்​யப்​பட்ட நிலை​யில், மற்​றொரு நடிக​ரான கிருஷ்ணா​விட​மும் போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர். இதுஒரு​புறம் இருக்க கண்​காணிப்பு வளை​யத்​துக்​குள் கோலிவுட் பிரபலங்​கள் கொண்டு வரப்​பட்​டுள்​ளனர்.

போதைப் பொருள் பயன்​படுத்​திய வழக்​கில் நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 23-ம் தேதி இரவு நுங்​கம்​பாக்​கம் போலீ​ஸா​ரால் கைது செய்​யப்​பட்​டார். பின்​னர், அவர் 10 மணி நேர விசா​ரணைக்கு பிறகு எழும்​பூர் நீதி​மன்ற மாஜிஸ்​திரேட் தயாளன் முன்​னிலை​யில் ஆஜர்​படுத்​தி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை 15 நாள் நீதி​மன்ற காவலில் புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

விசா​ரணை​யில், ‘தீங்​கிரை’ படத்தை தயாரித்த காங்​கிரஸ், திமுக மற்​றும் அதி​முக ஆகிய 3 கட்​சிகளி​லும் முன்பு தகவல் தொழில் நுட்ப பிரி​வில் நிர்​வாகி​யாக இருந்த மயி​லாப்​பூரைச் சேர்ந்த பிர​சாத் என்​பவர் மூலம் தனக்கு போதைப் பொருள் பழக்​க​மான​தாக ஸ்ரீகாந்த் வாக்​கு மூல​மாக தெரி​வித்து இருந்​தார்.

இதே​போல் கழுகு திரைப்பட நடிகர் கிருஷ்ணா​வும் போதைப் பொருளை பயன்​படுத்​தி​ய​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. மேலும், அவர் ஆதா​யம் இல்​லாமல் நண்​பர்​கள் மற்​றும் நடிகர், நடிகைகள் சிலருக்கு போதைப்​பொருளை கைமாற்​றிய​தாக​வும் தகவல் வெளி​யானது. இதையடுத்​து, அவரை விசா​ரணைக்கு ஆஜராகும்​படி நுங்​கம்​பாக்​கம் போலீ​ஸார் சம்​மன் அனுப்​பினர். ஆனால், அவர் தலைமறை​வா​னார். இதையடுத்​து, 5 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்டது.

இந்​நிலை​யில், நேற்று மாலை நடிகர் கிருஷ்ணா தனது வழக்​கறிஞர்​களு​டன் நுங்​கம்​பாக்​கம் காவல் உதவி ஆணை​யர் முன்​னிலை​யில் விசா​ரணைக்கு ஆஜரா​னார். அவரிடம் போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்​தினர். அப்​போது, அவர் அளித்த வாக்குமூலம்: எனக்கு இரைப்பை தொடர்​பான அலர்ஜி உள்​ளது. இதயத்​துடிப்பு வேக​மாக இருப்​ப​தால் சிகிச்சை எடுத்து வரு​கிறேன். இதனால், போதைப் பொருளை பயன்​படுத்த முடி​யாது.

நான் பயன்​படுத்​தி​யதும் இல்​லை. பிரதீப் குமார், பிர​சாந்த் என எனக்கு யாருட​னும் தொடர்பு இல்​லை. ஆனால், நடிகர் ஸ்ரீகாந்துடன் நட்​புடன் பழகி வந்​தேன். அவருடன் சில பார்ட்​டிகளில் கலந்து கொண்​டுள்​ளது உண்​மை​தான். ஆனால், நான் இது​வரை எந்த போதைப் பொருட்​களை​யும் பயன்படுத்​தி​யது இல்​லை. இவ்​வாறு கூறிய​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

இந்தநிலையில் அவருக்கு மருத்​துவ பரிசோதனை நடத்தி முடிக்​கப்பட்​டுள்​ளது. அதன் முடிவுக்காக போலீஸார் காத்திருக்கின்றனர். இதுஒரு​புறம் இருக்க கிருஷ்ணா வீட்​டிலும் போலீ​ஸார் சோதனை மேற்​கொண்​டனர். இதனிடையே நடிகர் ஸ்ரீகாந்த் சிறை​யில் போலீ​ஸாருக்கு ஒத்​துழைப்​ப​தாக​வும் கொடுக்​கும் உணவு​களை சாப்​பிட்டு அமை​தி​யாக இருப்​ப​தாக​வும் போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

இதுஒரு​புறம் இருக்க கடந்த மாதம் 22-ம் தேதி நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள மது​பான விடுதி ஒன்​றில் ஏற்​பட்ட மோதல் தொடர்​பாக ஏற்​கெனவே பிர​சாத் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். அவருக்​கும் போதைப் பொருள் விவ​காரத்​துக்​கும் தொடர்பு இருப்​ப​தால் இந்த வழக்​கிலும் அவரை கைது செய்ய போலீ​ஸார் முடிவு செய்​துள்​ளனர். மேலும், அவரை​யும் சிறை​யில் உள்ள ஆப்​பிரிக்க இளைஞர் ஜான், சேலம் சங்​ககிரி பிரதீப்​கு​மார் உள்​ளிட்​டோரை​யும் காவலில் எடுக்க போலீ​ஸார் முடிவு செய்​துள்ளனர்.

சினிமா துறையைச் சேர்ந்த மேலும் சிலர் இதேப்​போல் போதைப் பொருளை பயன்​படுத்​தி​ய​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. அது​வும் முன்​னணி நடிகர், நடிகைகள் பெயர்​களும் அடிபடு​கிறது. அவர்​களைப் பற்​றிய விவரங்​களை உளவு பிரிவு போலீ​ஸார் சேகரித்து வரு​கின்​றனர். இந்த போதைப் பொருள் பயன்​படுத்​தி​னால் சுமார் 45 நாட்​கள் வரை உடலில் இருக்​கும்.

இந்த காலக்​கட்​டத்​துக்​குள் மருத்​துவ பரிசோதனை நடத்​தி​னால் அது உறுதி செய்​யப்​பட்டு விடும். இதற்கு பயந்தே சில நடிகர், நடிகைகள் செல்​போன்​களை சுவிட்ச்​ ஆப்​ செய்​து வைத்​து​விட்​டு தலைமறை​வாகி​விட்​ட​தாக கூறப்​படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...