No menu items!

மொட்டை கிருஷ்ணனுக்கு நெல்சன் மனைவி ரூ. 75 லட்சம் கொடுத்தாரா இல்லையா? ஆம்ஸ்ட்ராங் கொலையில் திருப்பம்

மொட்டை கிருஷ்ணனுக்கு நெல்சன் மனைவி ரூ. 75 லட்சம் கொடுத்தாரா இல்லையா? ஆம்ஸ்ட்ராங் கொலையில் திருப்பம்

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திரைப்பட இயக்குநர் நெல்சன் மனைவி மோனிஷா காவல்துறையால் விசாரிக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக இருக்கும் மொட்டை கிருஷ்ணனின் வங்கி கணக்கிற்கு மோனிஷா ரூ. 75 லட்சம் அனுப்பியதாக நேற்று தகவல் வெளியானது. இது ஆதாரமற்றது என்று மோனிஷா விளக்கமளித்துள்ளார். உண்மை என்ன?

ஆம்ஸ்ட்ராங் கொலையில் நெல்சன் மனைவிக்கு தொடர்பா?

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆஜரான கூலிப்படையினர், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி வாங்கவே கொலை செய்தோம் என்று முதலில் தெரிவித்தனர். பின்னர், பொலிஸார் தீவிர விசாரணை நடத்திய நிலையில் பல திருப்பங்கள் ஏற்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக சமீபத்தில், ரவுடி நாகேந்திரன் மகனும் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகியுமான அஸ்வத்தாமனை பொலிஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து, வேலுர் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனை பொலிஸார் கைது செய்தனர்.

தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வந்த நிலையில் 24ஆவது நபராக பொலிஸார் அவரை கைது செய்தனர். ரவுடி சம்போ செந்தில், சீசிங் ராஜா மற்றும் மொட்டை கிருஷ்ணன் மூவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனுடன் தொலைபேசியில் மோனிஷா பேசியதாக தகவல் வெளியானது. இதனையடுத்து அவரிடம் பொலிஸார் விசாரணை செய்தனர். நெல்சன் மனைவியின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 75 லட்சம் மொட்டை கிருஷ்ணன் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இருவரும் சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சந்தித்துள்ளதும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

மோனிஷா மறுப்பு

ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக பணம் அனுப்பியதாக பரவும் தகவல் ஆதாரமற்றவை என்று இயக்குநர் நெல்சன் மனைவி மோனிஷா விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்கறிஞர் மூலம் அவர் வெளியிட்ட அறிக்கையில், “வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் என்பவரது வங்கி கணக்கிற்கு பண பரிவர்த்தனை செய்யப்பட்டதாக பரவும் தகவல் உண்மை இல்லை, அது முற்றிலும் தவறான தகவல். அடிப்படை ஆதராமற்ற தகவல்களை சிலர் பரப்புகிறார்கள். அவ்வாறான தகவல்களை பரப்ப வேண்டாம். அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை பரப்புவது எனக்கும், என் கணவர் இயக்குநர் நெல்சனின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல். தவறான செய்தியை பதிவிட்டவர்கள் அதனை நீக்க வேண்டும். அவ்வாறு நீக்கவில்லை என்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...