No menu items!

இந்தியா டிஜிட்​டல் துறை​யில் மிகப்​பெரிய புரட்சி – கிறிஸ்டலினா

இந்தியா டிஜிட்​டல் துறை​யில் மிகப்​பெரிய புரட்சி – கிறிஸ்டலினா

ஐஎம்​எப் தலை​வர் கிறிஸ்​டலினா ஜார்​ஜீவா அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில் இந்​தி​யாவைப் பற்றி பேசி​ய​தாவது:

கரோனா பெருந்​தொற்று காலத்​துக்கு பிறகு உலக பொருளா​தா​ரம் படிப்​படி​யாக மீட்சி அடைந்து வரு​கிறது. தற்​போதைய நிலை​யில் உலக பொருளா​தார வளர்ச்​சி​யின் இன்​ஜி​னாக இந்​தியா உரு​வெடுத்​திருக்​கிறது. அந்த நாட்​டில் மிகப்​பெரிய சீர்​திருத்​தங்​கள் அமல் செய்​யப்​பட்டு வரு​கின்​றனன. குறிப்​பாக டிஜிட்​டல் துறை​யில் மிகப்​பெரிய புரட்சி ஏற்​பட்​டிருக்​கிறது.

மிகப்​பெரிய மக்​கள் தொகை கொண்ட இந்​தி​யா​வில் டிஜிட்​டல்​ம​யம் சாத்​தி​யமற்​றது என்று உலக நாடு​கள் கூறி வந்​தன. அந்த கூற்​றை,இந்​தியா பொய்​யாக்கி உள்​ளது. இந்​திய மக்​கள் அனை​வருக்​கும் வெற்​றிகர​மாக ஆதார் அட்டை வழங்​கப்​பட்​டிருக்​கிறது. ஜிஎஸ்டி வரி விதிப்​பில் இந்​திய அரசு மிகப்​பெரிய சீர்​திருத்​தத்தை அமல்​படுத்தி உள்​ளது. அந்த நாட்​டில் 12%, 28% வரி வரம்​பு​கள் நீக்​கப்​பட்டு உள்​ளன. ஜிஎஸ்டி வரி கணிச​மாக குறைக்​கப்​பட்​டிருக்​கிறது. இவை உள்​ளிட்ட காரணங்​களால் இந்​திய பொருளா​தா​ரம் வேக​மாக வளர்ச்சி அடைந்து வரு​கிறது.

அதே​நேரம் சீனா​வின் பொருளா​தார வளர்ச்​சி​யில் பின்​னடைவு காணப்​படு​கிறது. அமெரிக்​கா​வில் பணவீக்​கம் அதி​கரித்து வரு​கிறது. சர்​வ​தேச அளவில் தங்​கத்​துக்​கான தேவை அதி​கரித்து வரு​கிறது. இது பெரும் சவாலாக உரு​வெடுக்​கக்​கூடும். இவ்​வாறு ஐஎம்​எப் தலை​வர் கிறிஸ்​டலினா ஜார்​ஜீவா தெரி​வித்​தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...