தமிழ் சினிமாவில் இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று பார்த்தால் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இவருக்கு படவாய்ப்பு வராததால் கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார் அதுல்யா. படங்கள் இல்லாததால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான போட்டோக்களை அப்லோடு செய்து தனக்குனு ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துக்கொண்டார்.
இதையடுத்து, சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்தார். படத்தின் பெயருக்கு ஏற்றமாதிரி இந்த படத்தில் விவகாரமான பல சீன்களில், அதுல்யா ரவி,கவர்ச்சியை வாரிஇறைத்து நடித்திருந்தார். என்னத்தான் படத்தில் கவர்ச்சி ஓவரா இருந்தாலும், கதை இல்லாததால், படம் சுமாராக ஓடியது. இதையடுத்து சமீபத்தில் வெளியான வட்டம், கடாவர் உள்ளிட்ட திரைப்படங்களில் சின்னச்சின்ன கேரக்டரில் கிடைத்த ரோலில் நடித்து வருகிறார்.
காதல் கண் கட்டுதே, அடுத்த சாட்டை, கேப் மாரி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை அதுல்யா ரவி. கச்சிதமான தோற்றத்தில் இருப்பவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் வைரலாவார்.
ஆனால், முகம் முன்பைவிட பளபளப்பாகவும் சீராகவும் இருப்பதால் ரசிகர்கள், அதுல்யா முக அறுவை சிகிச்சை செய்திருக்கிறார் எனக் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், இவர் நடித்த மெட்ராஸ் சிட்டி கேங்ஸ்டர் பட நிகழ்வில், “நீங்கள் அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக முகத்தில் அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறுகிறார்களே, உண்மையா?” எனக் கேட்கப்பட்டது.