No menu items!

சிதறிப்போன மெகா நட்சத்திர குடும்பம் – பின்னணி என்ன?

சிதறிப்போன மெகா நட்சத்திர குடும்பம் – பின்னணி என்ன?

தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை, அங்கே குடும்பங்களின் ராஜ்ஜியம்தான். சிரஞ்சீவி குடும்பம், அல்லு அரவிந்த் குடும்பம், ராமா நாயுடு குடும்பம், கிருஷ்ணா குடும்பம், மோகன் பாபு குடும்பம், என்.டி.ராமாராவ் குடும்பம் இந்த குடும்பங்களின் பெரிசுகளும் வாரிசுகளும்தான் தெலுங்கு சினிமா. இவர்களைத் தாண்டி தனியொருவனாக ஒரு நாயகன் உதயமாவது அவ்வளவு சுலபமல்ல.

இந்த குடும்பங்களில் சிரஞ்சீவி குடும்பமும், அல்லு அரவிந்த் குடும்பமும் நெருங்கிய உறவு. இதனால் இந்த இரண்டு குடும்பத்தையும் சேர்த்து மெகா குடும்பம் என்று அக்கட தேசத்தில் அழைப்பதுண்டு.
இந்த மெகா குடும்பத்தில்தான் இப்போது பிரச்சினை என்கிறார்கள். ஒன்றாய் இருந்த இரண்டு குடும்பங்களுக்குள் தனித்தனியாக சிதறிப் போகுமளவிற்கு மனஸ்தாபம் உருவாகி இருக்கிறதாம்.

நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இதனுடன் கூட்டணி வைத்த, சிரஞ்சீவியும் தம்பியும், தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டாருமான பவன் கல்யாணின் ‘ஜன சேனா’ கட்சி சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை இழந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸை விட அதிக இடங்களை வென்றிருக்கிறது.

இதையடுத்து பவன் கல்யாணின் வெற்றியை சிரஞ்சீவியின் கொனிடேலா குடும்பம் ஆரவாரமாக கொண்டாடியது. பவன் கல்யாண் சட்டமன்ற உறுப்பினராகவும், துணை முதல்வராகவும் பதவியேற்ற விழாவில் முக்கிய தெலுங்கு நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், கொனிடேலா குடும்பம் என கலந்து கொள்ள, அங்கே அல்லு குடும்பத்தில் இருந்து ஒருவர் கூட வரவில்லை.

இந்த பஞ்சாயத்தின் பின்னணி என்ன?

ஒரு ட்வீட். ஒரு பிரச்சாரம். ஒரு வெற்றி. இந்த மூன்றும் சேர்ந்து இரு குடும்பங்களையும் முகம் பார்த்து பேச விடாமல் செய்துவிட்டனவாம்.

சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்த போது, அல்லு அர்ஜூன் பவன் கல்யாணுக்கு ஆதரவாக ஒரு ட்வீட் செய்தார். ஆனால் அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. பவன் கல்யாண் போட்டியிடுகையில், ஜன சேனா கட்சிக்கு எதிராக களத்தில் இருக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் போட்டியிடும் தனது நண்பர் நந்தியாலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

பவன் கல்யாணுக்கு பிரச்சாரம் செய்யாமல் போட்டி கட்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் அல்லு அர்ஜூன் செய்த பிரச்சாரம், சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபுவுக்கு கோபத்தை கிளறிவிட்டது.

பிபி மெஷின் வெடிக்குமளவிற்கு கோபத்திற்கு சென்ற நாக பாபு, பதிலுக்கு ட்வீட் ஒன்றைத் தட்டிவிட்டார். ’நம்ம குடும்பத்தில் இருந்து ஒருவர் கூட அவர்களுக்கு ஆதரவு கொடுக்க கூடாது’ என்று கொஞ்சம் கறாராகவே அல்லு அர்ஜூனுக்கு மறைமுக எச்சரிக்கையை விடுத்தார் நாக பாபு. ஆனால் என்ன நடந்த து என தெரியவில்லை. கொஞ்ச நேரத்திலேயே அந்த ட்வீட்டை நாக பாபு சமூக ஊடகத்தில் இருந்து நீக்கிவிட்டார்.

இதற்குப் பிறகு மெகா குடும்பமான அல்லு, கொனிடேலா குடும்பங்களுக்கு இடையே என்ன நடந்தது என யாராலும் யூகிக்க முடியவில்லை. கொனிடேலா குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் சாய் தரம் தேஜ், அல்லு அர்ஜூன் மற்றும் அவரது மனைவி ஸ்நேகா ரெட்டியை சமூக ஊடகத்தில் பின் தொடர்வதை நிறுத்திவிட்டார்.
அதேநேரம் அல்லு அர்ஜூனின் தம்பி அல்லு சிரிஷ்ஷை இப்பொழுதும் அதே சமூக ஊடகத்தில் பின் தொடர்கிறார் சாய் தரம் தேஜ்.

இதுதான் பெரும் யூகத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது. அல்லு அர்ஜூன் செய்த பிரச்சாரம் இரு குடும்பங்களுக்கு இடையே விரிசலை உண்டாக்கி இருப்பதாக டோலிவுட் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு, மெகா ஸ்டார் சிரஞ்சீவி டோலிவுட் பிரபலங்களுக்கு ஒரு அறிவுரை கூறினார். ‘எந்த பிரச்சினையாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் பேசி முடியுங்கள். பொதுவெளியில் சொல்லாதீர்கள்’ என்றார்.

இன்று அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குள்ளே பிரச்சினை. ஆனால் அவர்கள் ஒட்டுமொத்த இந்தியாவும் கவனிக்கும் வகையில் பொதுவெளியில் மெளனமாக மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

வரலட்சுமியின் டீன் ஏஜ் மகள்!

வரலட்சுமிக்கும் இன்னும் திருமணமே ஆகவில்லை. அதற்குள் எப்படி டீன் ஏஜ் மகள் என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கும்.

நிக்கோலய் சச்தேவ் தெரியுமா?

மும்பைவாசியான நிக்கோலய் சச்தேவ், பாலிவுட்டு நட்சத்திரங்களுக்கு கொஞ்சம் நெருக்கமானவர். மும்பையில் இவருக்கு சொந்தமாக ஒரு பெரிய காலரி இருக்கிறது. இங்கு விலையுயர்ந்த ஓவியங்கள், கைவினைப் பொருட்களை விற்கிறார் நிக்கோலய்.

இது நிக்கோலயின் குடும்ப தொழில். இவரது பெற்றோர் 20 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த காலரி இது. அப்போதே இதற்கு பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் வாடிக்கையாளர்களாக இருந்தார்கள். நட்சத்திரங்களின் வீடுகள், தொழிலதிபர்களின் வீடுகளில் இவரது காலரி விற்கப்படும் ஓவியங்கள்தான் அலங்கரித்து வருகின்றன.

இந்த நிக்கோலய் ஓவியங்கள் விற்றாலும், உடம்பை அர்நால்ட் ஸ்வார்ச்ஸ்நேகர் மாதிரி வைத்து கொள்ள நினைப்பவர். உடலில் 40 சதவீதம் பச்சைக்குத்தியிருப்பவர்.

இவருக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறார். மனைவிக்கும் இவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட விவாகரத்து வாங்கிவிட்டார். ஆனால் தனிமை தாக்கவே அடுத்த திருமணத்திற்கு தயாராகிவிட்டார்.

இந்த நிக்கோலய் சச்தேவைத்தான் நம்மூர் சரத்குமார் – சாயா தேவியின் மகள் வரலட்சுமி திருமணம் செய்ய இருக்கிறார். ஜூலை 3-ம் தேதி இவர்களுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. இதற்கான ஷாப்பிங் வேலைகளில் நிக்கோலய் – வரலட்சுமி மும்முரமாக இருக்க, இவர்களோடு கூட இணைந்திருக்கிறார் வரலட்சுமியின் வருங்கால மகள்.

துபாயில் அப்பா நிக்கோலய், வருங்கால சித்தி வரலட்சும், வருங்கால தாத்தா சரத்குமார் ஆகியோருடன் ஷாப்பிங் செய்திருக்கிறார் காஷா.

வரலட்சுமிக்கு இது முதல் திருமணம். ஆனாலும் இவ்வளவு பெரிய மகள் இருப்பது பற்றி மீடியாவில் பரபரப்பக்கிறார்களே தவிர, வரலட்சுமி ரொம்பவே உற்சாகமாக இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...