No menu items!

ஆந்திரா, ஒடிஷா மாநிலங்களில் ஆட்சி மாற்றம்

ஆந்திரா, ஒடிஷா மாநிலங்களில் ஆட்சி மாற்றம்

ஆந்திரா மற்றும் ஒடிஷா மாநிலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும், ஒடிஷாவில் பாரதிய ஜனதா கட்சியும் ஆட்சி அமைத்துள்ளது.

ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் 130 தொகுதிகளிலும், ஜனசேனா 20 தொகுதிகளிலும், பாஜக 7 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. அதேநேரம், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் கூட்டணி பின்னடைவை சந்தித்து வருகிறது. இதுவரை ஆளும்கட்சியாக இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியால் எதிர்க்கட்சி அந்தஸ்த்தைக்கூட பெர முடியவில்லை.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

குப்பம் தொகுதியில் 9-வது முறையாக போட்டியிட்டுள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்றுள்ளார். இதேபோன்று புலிவேந்துலா தொகுதியில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும், . பிட்டாபுரம் தொகுதியில் நடிகர் பவன் கல்யாணும் முன்னிலை பெற்றுள்ளார்.

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘ஆந்திரப் பிரதேச மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்துகள்! தங்களது தலைமை ஆந்திரத்துக்கு வளத்தையும் வளர்ச்சியையும் தந்து, அம்மாநில மக்களின் கனவுகளையும் நம்பிக்கையையும் நிறைவேற்றட்டும்!” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒடிஷாவில் பாஜக வெற்றி

ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

147 தொகுதிகளில் பாஜக 73 சட்டப்பேரவை தொகுதிகளிலும், 18 மக்களவை தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளது. அதேநேரம் பிஜேடி 50 சட்டப்பேரவை தொகுதியிலும், இரண்டு மக்களவை தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 13 சட்டப்பேரவை தொகுதிகளிலும், ஒரு மக்களவை தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது.

இந்த தோல்வியின் மூலம் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...