No menu items!

ஜன​நாயகன் தணிக்கை சான்​றிதழ் வழக்கு வி​சா​ரணை​ தள்​ளி ​வைப்​பு

ஜன​நாயகன் தணிக்கை சான்​றிதழ் வழக்கு வி​சா​ரணை​ தள்​ளி ​வைப்​பு

ஹெச்​.​வினோத் இயக்​கத்​தில் விஜய், பூஜா ஹெக்​டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்​ளிட்​டோர் நடித்​துள்ள திரைப்​படம், ‘ஜன​நாயகன்’. கேவிஎன் புரொடக் ஷன்ஸ் தயாரித்​துள்ள இப்​படம் ஜன.9 அன்று திரை​யிட திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

ஆனால் இப்​படத்​துக்கு இன்​னும் தணிக்கை சான்​றிதழ் வழங்​க​வில்லை என்​ப​தால் உடனடி​யாக வழங்​கக்​கோரி தயாரிப்பு நிறு​வனம் தரப்​பி்ல் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடரப்​பட்​டது.

இந்த வழக்கு விசா​ரணை நீதிபதி பி.டி.ஆஷா முன்பு நேற்று வந்​தது. தயாரிப்பு நிறு​வனம் தரப்​பி்ல் மூத்த வழக்​கறிஞர் சதீஷ் பராசரன் மற்​றும் வழக்​கறிஞர் விஜயன் சுப்​ரமணி​யன் ஆகியோர் ஆஜராகி, ரூ.500 கோடி செல​வில் எடுக்​கப்​பட்​டுள்ள இத்​திரைப்​படம் கடந்த டிச.18 அன்றே தணிக்கை வாரி​யத்​துக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டது.

படத்தை ஆய்வு செய்த தணிக்கை வாரி​யம், டிச.22 அன்று ‘யு/ஏ’ சான்​றிதழ் வழங்க பரிந்​துரை செய்து சில காட்​சிகளை நீக்​க​வும், சில வசனங்​களை மவுன மாக்​க​வும் அறி​வுறுத்​தி​யது. அந்த நிபந்​தனை​களை பூர்த்தி செய்து டிச.29 அன்று மீண்​டும் தணிக்கை வாரி​யத்​துக்கு அனுப்பி வைத்​தும், இது​வரை தணிக்கை சான்றிதழ் வழங்​கப்​பட​வில்​லை.

இந்​நிலை​யில் திடீரென ஜன.5-ம் தேதி​யன்று இப்​படத்​துக்கு எதிராக புகார் வந்​துள்​ள​தாகக் கூறி ‘மறு ஆய்வு குழுவை’ அணுக தணிக்கை வாரி​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. இப்​படத்தை தணிக்கை வாரிய தலை​வர் மற்​றும் உறுப்​பினர்​கள் தவிர வேறு யாரும் பார்க்காத​போது, அந்த புகாரை அளித்​தது யார்? அதில் படத்துக்கு எதி​ராக என்ன காரணம் கூறி​யுள்​ளனர் என்​பது புரி​யாத புதி​ராக உள்ளது.

ஏற்​கெனவே யு/ஏ சான்​றிதழ் வழங்க பரிந்​துரை செய்த தணிக்கை வாரிய தலை​வரே, தற்​போது மறுஆய்வு குழுவை அணுக உத்​தர​விட்​டிருப்​பது முன்​னுக்​குப்​பின் முரணாக உள்​ளது. இன்​னும் 3 தினங்​களில் உலகம் முழு​வதும் 4 மொழிகளில் 5 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட திரையரங்​கு​களில் வெளி​யாக​வுள்ள நிலை​யில், இங்கு மட்​டும் தணிக்கை சான்​றிதழ் வழங்​காமல் இழுத்​தடிப்​பது ஏற்​புடையதல்ல என வாதிட்​டனர்.

தணிக்கை வாரி​யம் தரப்​பில் ஆஜரான மத்​திய அரசின் சொலிசிட்​டர் ஜெனரல் ஏ.ஆர்​.எல்​.சுந்​தரேசன், “ஜனநாயகன் படத்​தில் மத உணர்​வு​களைத் தூண்​டும் வகை​யிலும், புண்​படுத்​தும் வகை​யிலும் காட்​சிகள் அமைக்​கப்பட்​டுள்​ள​தாக புகார் வந்​துள்​ள​தால்தான் அப்​படத்தை மறுஆய்​வுக்கு அனுப்பி வைக்க தணிக்கை வாரி​யம் முடிவு செய்​துள்​ளது. எதை​யும் சட்​டரீ​தி​யாக ஆராய்ந்து அதன்​பிறகே முடிவு எடுக்க முடி​யும். கோடிக்​கணக்​கில் செல​விட்டு பணத்தை எடுத்​து​விட்​டோம் என்​ப​தற்​காக குறிப்​பிட்ட தேதிக்​குள் தணிக்கை சான்​றிதழ் வழங்க வேண்​டும் என நிர்ப்​பந்​திக்க முடி​யாது’’ என்​றார்.

இரு தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி, இப்​படத்தை ஏன் ஜன.10-ம் தேதிக்கு தள்ளி வைக்​கக்​கூ​டாது? என கேள்வி எழுப்​பி, தை பிறந்​தால் வழி பிறக்​கும் என்​றார். அதற்கு படத்​த​யாரிப்பு குழு வெளி​நாடு​களில் இப்​படம் ஜன.9 அன்று வெளி​யாகிவிடும் என்பதால்​தான் அதே தேதி​யன்று இந்​தி​யா​விலும் வெளி​யிட திட்டமிடப்பட்​டுள்​ளது என தெரி​வி்க்​கப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி, இப்​படத்​துக்கு எதி​ராக அளிக்​கப்​பட்ட புகாரை தணிக்கை வாரி​யம் ஜன.7-ம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் தாக்​கல் செய்ய வேண்​டும். அந்​தப் புகாரை பார்த்த பிறகு இந்த விவ​காரம் தொடர்​பாக முடிவு செய்​யப்​படும்​ எனக்​கூறி வி​சா​ரணை​யை இன்றைக்​கு தள்​ளி ​வைத்​துள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...