No menu items!

தள்ளி நில்லுங்க – தூய்மை பணியாளர்களிடம் ரோஜா அடவாடி!

தள்ளி நில்லுங்க – தூய்மை பணியாளர்களிடம் ரோஜா அடவாடி!

ஆந்திராவில் நடந்து முடிந்த தேர்தலில் நடிகை ரோஜா தோல்வியடைந்தார். ஜெகன் மோகன் கட்சி தோல்வியடைந்ததைவிட ரோஜா தோற்றதைத்தான் தெலுங்கு தேச தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள். ரிசல்ட் வந்த மறுநாளே ரோஜா பற்றிய மீம்ஸ்கள் அதிக அளவில் இணையத்தில் பரவியது. ஆளும் கட்சியாக இருந்தபோது ஜெகன் மோகனின் வலது கை போல இருந்தவர் ரோஜா. சந்திரபாபுவை அறிக்கை மூலம் தாக்கவும், பதில் அறிக்கை கொடுக்கவும் ரோஜவைத்தான் அதிகமாக பயன்படுத்தினார் ஜெகன். அதோடு சட்டசபையில் சந்திரபாபு நாயுடு கேள்வி கேட்டால் அதற்கு ரோஜாவை பதில் சொல்ல வைத்து அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்தி அதிரடிக் காட்டினார் ஜெகன். ஒரு கட்டத்தில் சந்திரபாபு நாயுடு குடும்பத்தையே துகிலுரிக்கும் பேச்சை ரோஜா பேசி சந்திரபாபு கண்ணீர் விட வைத்தார் ரோஜா.

இன்று காட்சியே மாறிப் போயிருக்கிறது. தெலுங்கு தேச தொண்டர்கள் தங்கள் வெற்றிக் கொண்டாட்டத்தை கொண்டாடுவதைவிட, ஜெகன் கட்சி பிரமுகர்களை தாக்குவதில் தான் அதிக மகிழ்ச்சி அடைந்தார்கள். அப்படி தாக்கப்பட்ட ரோஜாவின் ஆதரவாளர்கள் வீடுகள் சூறையாடப்பட்டன. சந்திரபாபு ஐடி விங் தொண்டர்கள் ஒருபடி மேலே போய் ரோஜா நடித்த படக்காட்சிகளை வைத்து அவரை கடுமையாக தாக்கினார்கள். ரோஜா எதிர்பார்க்காத இன்னொரு தாக்குதல் ரஜினி ரசிகர்கள் மத்தியிலிருந்து வந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழா கொணடாட்டத்தில் கலந்து கொண்டு ரஜினி பேசிய பேச்சுக்கு ரோஜா எதிர்ப்பு தெரிவித்து பேசியிருந்தார். அப்போதே ரஜினி ரசிகர்கள் மத்தியிருந்து கடும் ரியாக்‌ஷன் வந்திருந்தது. இப்போது ரோஜாவின் நிலையை வைத்து அவர்களும் சேர்ந்து கொண்டு மீம்ஸ் மற்றும் ட்ரோல் செய்து வருகிறார்கள். இதனால் ரோஜாவின் நிலை மோசமாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் இது அதிகமாகி நகரி தொகுதியில் இருந்த ரோஜாவின் நெருங்கிய நண்பர்கள் வீட்டு மீது முட்டைகளை தொடர்ந்து வீசியிருக்கிறார்கள். கைமீறிப்போகும் இந்த தாக்குதல்களை தடுக்க சந்திரபாபு நாயுடுவே சட்டமன்றத்தில் பேச வேண்டியதாகி விட்டது. இதன் பிறகுதான் ரோஜாவின் மீதும், அவருடைய ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் நடத்துவது குறைந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் ரோஜா திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அப்போது தரிசனம் முடிந்து வெளியில் வந்த ரோஜாவை பொதுமக்கள் சூழந்து கொண்டு செல்பி எடுக்க முயன்றனர். எல்லோருடனும் செல்பி எடுத்துக் கொண்டார் ரோஜா. அவருடன் செல்பி எடுக்க தூய்மைப்பணியாலர்கள் சிலரும் முயன்றனர். அப்போது ரோஜா அவர்களை தள்ளி நிற்குமாறு கைகளால் சைகை செய்ததும் அவர்கள் முகம் வாடிய நிலையில் ஒதுங்கி நிற்பதும் வீடியோவாக இணையத்தில் வெளி வந்தது. இதை வைத்து மீண்டும் ரோஜாவை தாக்க ஆரம்பித்தார்கள் தெலுங்கு தேச தொண்டர்கள்.

ரோஜாவின் உண்மை முகம் இதுதான் அவர் எப்போதும் மக்களை விரும்பும் த;லைவராக இருப்பது இல்லை எளிய மக்களை புறக்கணிப்பவராகவே இருந்திருக்கிறார் என்று ரோஜாவுக்கு எதிராக ஒரு குரூப் களத்தில் இறங்கியிருக்கிறது. இவர்களை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் ரோஜா திணறி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...