No menu items!

ரஜினியின் மகளாக கமலின் மகள்! – லோகேஷ் கனகராஜ் அதிரடி!

ரஜினியின் மகளாக கமலின் மகள்! – லோகேஷ் கனகராஜ் அதிரடி!

ரஜினியின் கடைசி திரைப்படம் எது ? நெல்சன் இயக்க இருக்கும் ஜெய்லர் இரண்டாம் பாகம் என்கிற பேச்சு இரண்டு நாட்களாக எழுந்து வருகிறது. ரஜினி உடல் நிலையில் சில முக்கிய பரிசோதனை செய்ய இந்த ஆண்டு அமெரிக்க செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தின் காட்சிகளை வேகமாக முடித்துக் கொடுக்க இருக்கிறார் ரஜினி. அவர் நடிக்கும் காட்சிகளை மட்டும் முதற்கட்டமாக எடுக்கும் பணி நடந்து வருகிறது.

படத்தில் சில கதாபாத்திரங்களுக்கு அனைத்து மொழிகளிலிருந்தும் முக்கிய நடிகர்களை நடிக்க வைக்கும் முயற்சியில் இருக்கிறது படக்குழு. வழக்கம்போல் கன்னடம் , தெலுங்கு, இந்தி நட்சத்திர தேர்வு செய்து விட்டனர். மலையாலத்தில் பகத் பாசில் நேரடியாக வில்லன் வேடத்தில் நடிப்பது மட்டும் தற்போது உறுதியாகியிருக்கிறது. அவர் விக்ரம் படத்தில் நடித்த அதே பாத்திரத்தில்தான் நடிக்க இருப்பதாக தெரிகிறது.

அந்த போதைக் கடத்தில் உலகத்திற்குள் இருக்கும் இன்னும் சில தாதாக்களை கூலி படத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறார் லோகேஷ். அந்த பாத்திரங்களில்தான் ரசிகர்கள் எதிர்பாராத சில நடிகர்கள் வர இருக்கிறார்கள். இதில் பெண் தாதாக்களும் உண்டு.

இந்த நேரத்தில் ரஜினி இன்னும் எத்தனை படங்களில் நடிப்பார் என்பது பற்றிய பேச்சு எழுந்திருக்கிறது. ரஜினிக்கு கதை சொல்லும் இயக்குனர்கள் பட்டியலில் கார்த்திக் சுப்புராஜ், வினோத் உடபட இன்னும் சில இயக்குனர்கள் இருந்தாலும் ரஜினிக்கு அவர்கள் படங்களில் நடிப்பாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

அவருக்கு சில மாதங்கள் ஒய்வு தேவைப்படுகிறது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். இதனால் இந்த ஆண்டு அமெரிக்க பயணம் இருக்கும் என்கிற தகவலும் வருகிறது. ஒருவேளை ரஜினி திரைப்படங்களைக் குறைத்துக் கொண்டால் என்ன செய்வது என்பதால்தான் ரஜினியின் கூலியில் நடிக்க சில பிரபலங்கள் விரும்பியிருக்கிறார்கள். அதில் ஸ்ருதிஹாசனும் ஒருவர் அவர் படத்தில் என்ன பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பது பற்றி நாம் விசாரித்தோம்.

ரஜினி படத்தில் நான் நடிக்க வேண்டும் என்கிற தன் விருப்பத்தை அப்பா கமல்ஹாசனிடம் சொல்லியிருக்கிறார். அவரையே ரஜினியிடம் பேச்ச்சொல்லி விட்டார் கமல். ஆனால் புத்திசாலியான ஸ்ருதிஹாசன் படத்தின் இயக்குனரை தன்னுடைய ஆல்பத்தில் நடிகராக்கி அவருடன் ஜோடி சேர்ந்து நடித்து அதை வெளியிட்டார். இதில் உருகிய இயக்குனர் லோகேஷ் படத்தில் ரஜினியுடன் ஸ்ருதி ஹாசன் தொடர்ந்து வருவது போன்ற ஒரு கதாபாத்திரத்தை எழுதியிருக்கிறார். அது மகளாக இருக்கும் என்கிறார்கள் யூனிட் ஆட்கள்.

இன்னொரு விஐபி தெலுங்கு நடிகர் மோகன்பாபு. ரஜினியின் நீண்ட கால நண்பரான இவர் ரஜினிக்கு முக்கிய வில்லனாக நடித்த படம் தாய் மீது சத்தியம் அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்க வில்லை. தமிழில் நாட்டாமை ஹிட் ஆகி அதை தெலுங்கில் எடுத்தனர். அப்போது விஜயகுமார் நடித்த பெரிய நாட்டாமை பாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார். பெத்தராயுடு என்ற அந்தப்படம் பெரிய ஹிட் ஆனது. நீண்ட நாட்களுக்கு பிறகு சமீபத்தில் இருவசும் சந்தித்துக் கொண்டனர். அப்போது தனது படங்கள் குறித்து ரஜினி பேசியிருக்கிறார்.

அப்போது ரஜினி மனதில் தோன்றிய ஒரு யோசனைதான் மோகன்பாபுவை தனது படத்தில் நடிக்க வைப்பது என்பது. இதை ரஜினி சொன்னதும் உற்சாகமாக நடிக்க ஒப்புக் கொண்டாராம் மோகன்பாபு.


படத்தில் அதிரடியான பட்டையை கிளப்பும் ஒரு காட்சியில் தூள் கிளப்ப இருக்கிறார் மோகன்பாபு என்று படக்குழுவிலிருந்து செய்தி கசிகிறது. இப்படி தனது படங்களில் இனி சர்ப்பரைஸ் கொடுக்கும் சில நடிகர்களை நடிக்க வைக்க ரஜினி திட்டமிட்டிருக்கிறார் என்கிறார்கள். அதனால் கூலி படப்பிடிப்பு முடியும் வரைக்கும் ஒவ்வொருவராக வெளியில் வருவார்கள் என்கிறது சினிமா வட்டாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...