No menu items!

விசா மோசடிக்கு 7 ஆண்டு சிறை

விசா மோசடிக்கு 7 ஆண்டு சிறை

இந்​தி​யா​வில் புதிய குடி​யுரிமை சட்​டத்தை கொண்டு வரும் வகை​யில், மக்​களவை​யில் குடி​யுரிமை மற்​றும் வெளி​நாட்​டினர் மசோதா தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்​தி​யா​வில் போலி பாஸ்​போர்ட், போலி விசா பயன்​படுத்தி நுழைந்​தாலோ, தங்​கி​யிருந்​தாலோ, இந்​தி​யாவை விட்டு வெளி​யேறியது கண்​டு​பிடிக்​கப்​பட்​டாலோ, அதி​கபட்​சம் 7 ஆண்டு சிறை தண்​டனை, ரூ.10 லட்​சம் அபராதம் விதிக்​கப்​படும் என்று அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

கடந்த 2023-24-ம் நிதி ஆண்​டில் இந்​தி​யா​வுக்கு மொத்​தம் 98.40 லட்​சம் வெளி​நாட்​டினர் வந்​துள்​ளனர். இந்​தி​யா​வுக்​குள் நுழை​யும் பாஸ்​போர்ட் சட்​டம் (1920), வெளி​நாட்​டினர் பதிவு சட்​டம் (1939), வெளி​நாட்​டினர் சட்​டம் (1946), குடி​யுரிமை சட்​டம் ஆகிய 4 சட்​டங்​களால் தற்​போது வெளி​நாட்​டினர் வருகை நிர்​வகிக்​கப்​படு​கிறது. இந்த சட்​டங்​களின்​படி, வெளி​நாட்​டினருக்கு பல கட்​டுப்​பாடு​கள் உள்​ளன.

கல்வி, வேலை​வாய்ப்​பு, மருத்​துவ சிகிச்சை ஆகிய​வற்​றுக்​காக நீண்ட கால விசா​வில் வரும் வெளி​நாட்​டினர், 14 நாட்​களுக்​குள் வெளி​நாட்​டினர் பதிவு அலு​வல​கத்​தில் பதிவு செய்ய வேண்​டும். பாகிஸ்​தானை சேர்ந்​தவர்​கள் என்றால் 24 மணி நேரத்​தில் பதிவு செய்ய வேண்​டும். இது மட்டுமின்றி, அந்​த​மான் நிகோ​பார் தீவு​கள், ஜம்மு காஷ்மீர், உத்​த​ராகண்ட், இமாச்​சலப் பிரதேசம், ராஜஸ்​தான், வடகிழக்கு மாநிலங்​களுக்கு செல்வதானால் சிறப்பு அனு​மதி பெற வேண்​டும்.

சட்டம் கொண்டுவர திட்டம்: இது​போன்ற பழைய சட்​டங்​களை ரத்து செய்​து​விட்​டு, புதிய குடி​யுரிமை சட்​டத்தை கொண்​டுவர மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. அதன்படி, மக்​களவை​யில் குடி​யுரிமை மற்​றும் வெளி​நாட்​டினர் மசோ​தாவை (2025) மத்​திய உள்​துறை அமைச்​சகம் கடந்த 11-ம்
தேதி தாக்​கல் செய்​தது.

இந்த புதிய மசோதாவில் இடம்​பெற்​றுள்ள முக்​கிய அம்​சங்​கள் பற்​றிய விவரம்: இந்​தி​யா​வில் போலி பாஸ்​போர்ட், போலி விசா பயன்​படுத்தி ஒரு​வர் நுழைந்​தாலோ, தங்​கி​யிருந்​தாலோ அல்​லது இந்​தி​யாவை விட்டு வெளி​யேறியது கண்​டு​பிடிக்​கப்​பட்​டாலோ, 2 ஆண்​டு​கள் முதல் அதி​கபட்​சம் 7 ஆண்​டு​கள் வரை சிறை தண்​டனை விதிக்​கப்​படும். மேலும், ரூ.1 லட்​சம் முதல் ரூ.10 லட்​சம் வரை அபராத​மும் விதிக்​கப்​படும்.

விசா காலம் முடிந்து இந்​தி​யா​வில் தங்​கி​யிருக்​கும் வெளி​நாட்​டினரை கண்​காணிக்க உதவும் வகை​யில் ஓட்​டல்​கள், பல்​கலைக்​கழகங்​கள், கல்வி நிறு​வனங்​கள், மருத்​து​வ​மனை​கள் ஆகியவை வெளி​நாட்​டினர் பற்​றிய விவரங்​களை சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம். அதே​போல, இந்தியாவுக்கு பயணியர் வாகனங்களை இயக்கும் சர்​வ​தேச விமான நிறு​வனங்​கள், கப்​பல் நிறு​வனங்​கள் ஆகியவை தங்​களது ஊழியர்​கள், பயணி​களின் விவரங்​களை தெரிவிக்க வேண்​டும்.

மத்திய அரசுக்கு அதிகாரம்: வெளி​நாட்​டினரின் வரு​கையை ஒழுங்​குபடுத்​த​வும், தேவைப்​பட்​டால் அவர்​களுக்கு கட்​டுப்​பாடு​கள் விதிக்​க​வும் இந்த புதிய சட்​டம் மத்​திய அரசுக்கு அதி​காரம் அளிக்​கிறது. வெளி​நாட்​டினர் மற்​றும் குடி​யுரிமை சம்​பந்​த​மான அனைத்து விவரங்​களை​யும் விரி​வாக நிர்​வகிக்க இந்த மசோதா கொண்​டு​வரப்​பட்டுள்ளது.

இந்த மசோதாவில் பல நடை​முறை​கள் எளி​தாக்​கப்​பட்​டுள்​ளன. தற்​போதைய தேவை​களுக்கு ஏற்ப, புதிய அம்​சங்​களும் சேர்க்​கப்​பட்​டுள்​ளன. சட்​டங்​களை எளி​தாக்​கு​வது, தேவையற்ற அம்​சங்​களை நீக்​கு​வது, எளி​தாக தொழில் செய்​வதை ஊக்​கு​விப்​பது, நாட்​டின் பாது​காப்பு அம்​சங்​கள், பொருளா​தார வளர்ச்​சி, சுற்​றுலாவை மேம்​படுத்​து​வது ஆகிய​வற்றை கருத்​தில் கொண்​டும் இந்​திய புதிய மசோதா கொண்​டு​வரப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து மத்​திய அரசு அதி​காரி​கள் கூறிய​தாவது: சட்​ட​விரோத குடி​யுரிமை பிரச்​சினை​களுக்கு தீர்வு காண​வும், விசா காலம் முடிந்து இந்​தி​யா​வில் தங்​கி​யிருக்​கும் வெளி​நாட்​டினரை கண்​காணிக்​க​வும் இந்த மசோதா உதவும். வெளி​நாடு​களில் உள்ள இந்​திய தூதரகங்​கள், அனைத்​து​ வித​மான விசாக்​களை​யும் வெளி​நாட்​டினருக்கு வழங்க முடி​யும். குடி​யுரிமை பிரிவு 167 நாடு​களை சேர்ந்த மக்​களுக்கு 7 பிரிவு​களின்​கீழ் மின்​னணு விசாக்​களை வழங்க முடி​யும்.

ஜப்​பான், தென் கொரியா மற்​றும் ஐக்​கிய அரபு அமீரகத்தை சேர்ந்​தவர்​கள் ஏற்​கெனவே இ-வி​சா வைத்​திருந்​தால், இந்​தி​யா​வில் உள்ள 6 குறிப்​பிட்​ட வி​மான நிலை​யங்​களில்​ வி​சாக்​களை பெற முடி​யும்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...