No menu items!

ஸ்மார்ட்போன் மூலம் வாக்களிக்கலாம் – பிஹார் தேர்தல் ஆணையம்

ஸ்மார்ட்போன் மூலம் வாக்களிக்கலாம் – பிஹார் தேர்தல் ஆணையம்

முதல் முறையாக மின்னணு முறையில் ஸ்மார்ட்போன் மூலம் வாக்களிக்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது பிஹார் மாநில தேர்தல் ஆணையம்.

இந்த முன்முயற்சி அந்த மாநிலத்தில் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அறிமுகமாகிறது.

இது தொடர்பாக இந்திய வானொலி செய்தி பிரிவுக்கு பிஹார் மாநில தேர்தல் ஆணையர் தீபக் பிரசாத் விவரித்துள்ளார்.

அதில் அவர், “மின்னணு முறையில் மொபைல் மூலம் வாக்காளர்கள் வாக்களிக்கும் செயல்முறை மொத்தம் இரண்டு ஆண்ட்ராய்டு மொபைல் செயலிகள் மூலம் செயல்படுத்தப்படும். இதற்காக C-DAC மையம் ‘e-Voting SECBHR’ என்ற செயலியை வடிவமைத்துள்ளது. பிஹார் மாநில தேர்தல் ஆணையம் தரப்பிலும் ஒரு செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை சுமார் பத்தாயிரம் வாக்காளர்கள் மின்னணு முறையில் மொபைல் போனை பயன்படுத்தி வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். இந்த முறையின் கீழ் சுமார் ஐம்பதாயிரம் வாக்காளர்கள் வரையில் வாக்குச்சாவடிக்கு செல்லாமல் மொபைல் போன் மூலம் வாக்களிக்க முடியும்.

பல்வேறு வகையில் இந்த முன்முயற்சி பலன் தரும் என நம்புகிறோம். குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், மூத்த குடிமக்கள், தீவிர உடல்நிலை பாதிப்பு கொண்ட வாக்காளர்கள் இதன் மூலம் வாக்களிக்கலாம். இது நிச்சயம் தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க செய்யும் என எதிர்பார்க்கிறோம்.

மொபைல் போன் மூலம் வாக்களிக்கும் இந்த நடைமுறையில் டிஜிட்டல் முறையில் பாதுகாப்பு சார்ந்த அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதற்காக பிளாக்செயின் பிளாட்பார்ம், பயனரின் லைவ்லினஸை கண்டறிதல், ஃபேஸ் மேட்ச், லைவ் ஃபேஸ் ஸ்கேன் போன்ற அம்சங்களின் மூலம் வாக்காளர்களின் ஆதாரம் சரிபார்க்கப்படும். மின்னணு முறையில் வாக்குப்பதிவு செய்யும் போது தற்போது விவிபாட் அம்சம் போல யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறியலாம். மொபைல் போன் மூலம் வாக்களிக்கும் போதும் அதே போல சரிபார்க்கும் முறையும் இதில் உள்ளது.

வாக்குப்பதிவு சார்ந்து டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வதில் நாட்டிலேயே பிஹார் தேர்தல் ஆணையம் முன்னோடியாக திகழ்கிறது. அதற்கு உதாரணமாக டிஜிட்டல் லாக் போன்றவற்றை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் ஸ்ட்ராங் ரூமில் இதற்கு முன்பு அறிமுகம் செய்ததை சொல்லலாம். இதற்கு முன்பு இணையம் மூலம் மின்னணு வாக்குப்பதிவு நடைமுறையை ஐரோப்பாவின் வடக்கு பகுதியில் உள்ள சின்னஞ்சிறிய தேசமான எஸ்தோனியா கடைபிடித்துள்ளது என்பதை எங்களுக்கு கிடைத்த தகவல்கள் மூலம் அறிந்தோம்” என அவர் கூறியுள்ளார்.

மொபைல் மூலம் வாக்களிப்பது எப்படி? – ஸ்மார்ட்போனில் ‘Vote’ என உள்ள பட்டனை இதற்காக பதிவு செய்த வாக்காளர்கள் க்ளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் அதில் வரும் அறிவுறுத்தலை கவனமாக வாசிக்க வேண்டும். தங்களது வாக்காளர் விவரங்களை பகிர்வதற்கான சம்மதத்தை உறுதி செய்ய வேண்டும்.

பின்னர் வாக்காளர் அடையாள அட்டை எண், மொபைல் எண்ணை கொடுத்து ‘சப்மிட்’ செய்ய வேண்டும். அது சரிபார்க்கப்பட்ட பின்னர் ‘Device Authenticated’ என்ற மெசேஜ் வரும். பின்னர் வாக்காளர் தனது செல்ஃபி புகைப்படத்தை ரியல் டைமில் அந்த செயலியை பயன்படுத்தி எடுத்து, சமர்ப்பிக்க வேண்டும். ரீ-டெக் எடுக்கும் வசதியும் இதில் உள்ளது. அது சரிபார்க்கப்பட்ட பின்னர் வாக்காளர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யலாம்.

வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு வலது பக்கம் உள்ள ‘Vote’ என்ற பட்டனை க்ளிக் செய்து வாக்களிக்கலாம். பின்னர் 20 விநாடிகள் வரை யாருக்கு வாக்களித்தோம் என்ற விவரத்தை ‘விவிபாட்’ அம்சம் போன்ற அம்சத்தின் மூலம் வாக்காளர்கள் அறிய முடியும்.

அதே போல வெற்றிகரமாக வாக்கு செலுத்தியது தொடர்பாக வாக்காளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியும் வரும் என அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இந்த செயலியை பயன்படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...