No menu items!

ரஞ்சித் Vs ரவீந்தர் – பிக் பாஸ் வீட்டில் அடிதடி

ரஞ்சித் Vs ரவீந்தர் – பிக் பாஸ் வீட்டில் அடிதடி

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, அக்டோபர் 6-ஆம் தேதி பிரமாண்டமாக துவங்கியது. இந்த நிகழ்ச்சியை கமலஹாசனுக்கு பதிலாக தற்போது தொகுத்து வழங்கி வருகிறார் விஜய் சேதுபதி. பிக் பாஸ் வீட்டின் உள்ளே முதல் போட்டியாளராக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் நுழைந்த நிலையில், அடுத்தடுத்து சாச்சனா, தீபக், பவித்ரா ஜனனி, ஜாக்குலின், முத்துக்குமரன், அருண் பிரசாத், ஜெஃப்ரி, சௌந்தர்யா நஞ்சுட்டன், அர்னவ், அக்ஷிதா, போன்ற போட்டியாளர்கள் நுழைந்தனர்.

முதல் நாள் சச்சனா வெளியேறியது எல்லோருக்கும் ஷாக். அடுத்து வெளியேறப்போகிறவர் ரவீந்தர்தான் என்று போட்டியாளர்கள் மத்தியில் ஒரு எண்ணம் இருந்து வருகிறது. அதற்கு காரணம் ரவீந்தர் கால் அடிபட்டு விட்டதுதான். ஆனால் அது பற்றி ரவீந்தர் கவலைப்படவில்லை. ஆனால் இரண்டாம் நாள் பகலில் நடந்த மோதல் வெளிசத்திற்கு வந்திருக்கிறது. இதில் நடிகர் ரஞ்சித் ரவீந்தர் இருவருக்கும் கைகலப்பு வரைக்கும் போய் விட்டது. அவரை விலக்கி விடப்போனவர்கள் அனைவரும் தடுமாறி கீழே விழுந்தனர்.

ரஞ்சித் – ரவீந்தர் இருவருக்கும் வார்த்தை தடித்து ஒருமையில் பேசியது அனைவருக்குள்ளும் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது. இதனால் சக போட்டியாளர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இருவருக்குள்ளும் கடுமையான வார்த்தைப்போர் நடந்து முடிந்திருக்கிறது. இந்த ஹீட் இந்த வாரத்திற்கு போதுமானதாக இருக்கும் வாரக்கடைசியில் வரப்போகும் விஜய் சேதுபதி யாருக்கு என்ன ரிவிட் வைக்கப்போகிறாரோ என்று பார்வையாளுக்குள் எதிர்பார்ப்பு தகித்துக் கொண்டிருக்கிறது.

முதல் வாரத்தின் கேப்டனாக தர்ஷிகா தேர்வான நிலையில், 6 பேர் இந்த வார நாமினேஷனில் சிக்கி உள்ளனர். அதில் ரவீந்தர் சந்திரசேகர், முத்துக்குமரன், செளந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத், ரஞ்சித் ஆகியோர் உள்ளனர். முதல் வாரத்தில் ரஞ்சித் அல்லது ரவீந்தர் சந்திரசேகர் வெளியேறவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ரவீந்தர் சந்திரசேகரின் அதீத எடை காரணமாக பிக்பாஸ் வீட்டில் டாஸ்குகளை அவர் மிகவும் சிரமத்துடன் எதிர் கொண்டு வருவதால் அவர் இந்த வாரம் வெளியேற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து, ஒவ்வொரு வருடமும் விமர்சனம் செய்து வரும் வனிதா விஜயகுமார் இந்த முறையும் வழக்கம் போல் தன்னுடைய பணியை மேற்கொண்டுள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ரவீந்தருக்கு சிபாரிசு செய்தது நான் தான் என இந்தியா கிளிட்ஸ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் வனிதா விஜயகுமார் கூறியுள்ளார். கடந்த இரண்டு சீசன்களாகவே அவர் பெயர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடிபட்டு வந்தது. நான் தான் அவரை சிபாரிசு செய்து உள்ளே அனுப்பினேன் என கூறியுள்ளார். அதோடு சத்யா பற்றி கூறும்போது அவன் எல்லாவற்றையும் திறந்து போட்டுக்கொண்டு சும்மா திரியிறான். என்று கமெண்ட் அடித்ததாக இணையத்தில் பரவி வருகிறது. வனிதா அப்படி சொல்லியிருந்தாலும் அவர் சொன்னதை உண்மை என்று நிரூபிப்பதைப்போல சத்யாவின் போக்கு அவ்வளவு ரசிக்கும்படியாக இல்லை. இவருக்கும் இந்த வாரம் விஜய் சேதுபதியிடம் அர்ச்சனை நடக்கும் என்று தெரிகிறது.

வாரக்கடைசியில் பார்ப்போம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...