No menu items!

விஜய் டிவியின் பிரியங்கா ரகசியம்!

விஜய் டிவியின் பிரியங்கா ரகசியம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. தற்போது 5 வது சீஸன் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மணிமேகலை இருந்து வருகிறார். நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பலரோடு பிரியங்காவும் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒளிபரப்பான எபிசோடில் பிரியங்கா மணிமேகலையை டீஸ் பண்ணியதால் மணிமேகலை நிகழ்ச்சியை விட்டே விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

மணிமேகலையின் இந்த அறிவிப்பு டிவி ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக இணையத்தில் அதிக செய்திகள் பகிரப்பட்டு வருகிறது.

இது பற்றி விசாரித்தவரையில் அனைவரும் பிரியங்கா இருக்கும் திசை பக்கம் கையைக் காட்டுகிறார்கள். அவர் விஜய் டிவியில் சேர வரும்போதே அதுவரைக்கும் தொகுப்பாளராக இருந்த பாவனாவை அந்த பொறுப்பிலிருந்து விலக்கி விட்டுத்தான் நுழைந்தார். மெல்ல மெல்ல தன்னுடைய ஆளுமையை எல்லா இடங்களிலும் செலுத்த ஆரம்பித்தார். உடன் பணியாற்றும் பெண் தொகுப்பாளர்கள், போட்டியாளர்கள் எல்லோரையும் அலட்சியத்துடன் நடத்துவது, கேமரா ஓடிக்கொண்டிருக்கும்போதே அவர்களைப் பற்றி மட்டமான கமெண்டுகளை அடிப்பதும் ,அதை எடிட் செய்யாமல் அப்படியே ஒளிபரப்பாவதை உறுதிப்படுத்தித் தெரிந்து கொள்வதுமாக தன் செல்வாக்கை வளர்த்து வைத்திருந்தார்.

எல்லா நிகழ்ச்சிகளிலும் எப்படியாவது தான் கலந்து கொள்ள வேண்டும் என்று ஒரு திட்டம் போட்டு அதை சக்ஸஸ் பண்ணி அந்த நிகழ்ச்சியில் இடம் பிடித்தும் விடுவார். இது எப்படி சாத்தியமாகிறது என்பது ’பிரியங்கா ரகசியமாகவே’ இருக்கிறது.

அதோடு நிகழ்ச்சியில் தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட்டு கருத்துச் சொல்வதும், அங்கு இருப்பவர்களிடம் தன் ஆளுமையைக் காட்டுவதுமாக அந்த இடத்தை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்வதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இது பற்றி பலரும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், டிவி நிர்வாகத்தினரிடம் புகாராக சொல்லியும் எடுபடவில்லை என்பதுதான் அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கிறது.

இதனால் பிரியங்காவோடு போட்டி போட முடியாமல் சேனலை விட்டே விலகிப்போகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஜாக்குலனின் அழகிலும், நிகழ்ச்சியை நடத்தும் விதத்திலும் தனித்திறமையோடு நடந்து கொள்பவர் ஜாக்குலினுக்கு என்று தனியாக ஆடியன்ஸ் உருவாக ஆரம்பித்தார்கள். இந்த நேரத்தில்தான் பிரியங்காவின் காய் நகர்த்தல் மூலம் அவருக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார். ஜாக்குலின் இதைத்தெரிந்து கொண்டுதான் தானாகவே அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிக்கொண்டார். அவர் சீரியல் பக்கம் நடிக்க வந்தது இதனால்தான் என்கிறார்கள்.

அதோடு பிரியங்கா தன்னோடு நடிக்கும் சக கலைஞர்களை மரியாதை இல்லாமல் நடத்துவதும், தன்னைவிட வயதில் மூத்தவர்களையும் கூட ஒருமையில் அழைப்பதுமாக நடந்து கொள்கிறார் என்கிறார்கள்.
குறிப்பிட்ட நாளன்று மணிமேகலையை ”உனக்கு நிகழ்ச்சி நடத்தவே தெரியவில்லை” என்று நேரடியாக சொல்லியிருக்கிறார்.இதில் மணிமேகலை ரொம்பவே காயப்பட்டிருக்கிறார். இந்த வேகத்தில் அவர் தன்னை அந்த நிகழ்ச்சியிலிருந்து விடுவித்துக் கொண்டிருக்கிறார். இது பற்றி அவர் தன்னுடைய யூ டியூப் சேனலில் பேசியிருக்கிறார். என்னுடைய சுயமரியாதையை காப்பாற்றவே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் பிரியங்காவால் மன அழுத்தத்திற்கு ஆளாகி டிவி நிகழ்ச்சியிலிருந்து விலகிக்கொண்டிருக்கிறார்.

மணிமேகலையின் வீடியோ பலராலும் பகிரப்பட்டு அது வைரலாகி வருகிறது. இன்னொரு பக்கம் நெட்டிசன்கள் எல்லாம் சேர்ந்து பிரியங்காவை கடுமையாக விமர்சனம் செய்து திட்டி வருகிறார்கள்.

பிரியங்கா என்கிற சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்கப்போகிறதோ ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...