No menu items!

கணவருடன் பேச வேண்டும் – ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி கடிதம்

கணவருடன் பேச வேண்டும் – ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி கடிதம்

ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடிதம் அனுப்பிய கையோடு அடுத்த கட்டமாக விவாகரத்து கோரி சென்னை நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக தெரிகிறது. இந்த விவகாரம் அறிந்து திரையுலகினரும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்த அதே வேளியில் ஏன் இந்த பிரிவு என்பதற்கான காரணத்தை பலரும் பல வகைகளில் எழுதி வருகிறார்கள். சிலர் முன்னணி நடிகர் ஒருவரின் போட்டோவை போட்டு இவர்தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்று இணையத்தில் பகிர, அது இப்போது வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் ரவியின் மனைவி ஆர்த்தி தன் சார்பாக ஊடகங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். ஆர்த்தி ரவி என்று பெயருடன் இருக்கும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,

சமீபத்தில் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும், எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும், மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும் என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை… இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக நான் உணர்கிறேன். என் கணவரிடம் மனம் விட்டு பேச, என் கணவரை சந்திக்க வேண்டும் என நான் சமீப காலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தை சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர, குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல.

ஆழ்ந்த மன வேதனையில் இருக்கின்ற நிலையிலும், நான் பொதுவெளியில் இது குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவே இப்போதும் விரும்புகிறேன். ஆனால் என் மீது குற்றம் சாட்டியும் என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர் கொள்ள வேண்டி உள்ளது. ஒரு தாயாக எனக்கு எப்போதும் என் குழந்தைகளின் நலனும் எதிர்காலமே முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் குழந்தைகளை காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்க இயலாது. மறுக்கப்படாத பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால், இவற்றை மறுப்பதும் என் முதல் கடமையாகிறது. தற்போது இந்த கடினமான காலகட்டத்தில் என் குழந்தைகளுக்கு தேவைப்படும் தைரியத்தையும், மனோதிடத்தையும் அவர்களுடன் ஒருத்தியாக நின்று அவர்களுக்கு வழங்குவதே என் தலையால கடமை. காலம், நடந்த உண்மைகளை எந்த பாரபட்சமும் இன்றி உணர்த்தும் என்பதை முழுமையாக நம்புகிறேன்.

இந்த கடின காலத்தை நானும் என் குழந்தைகளும் கடக்கும் வரை எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இத்தனை காலமாக எங்களுக்கு ஆதரவு மட்டும் இன்றி, நல்வழி காட்டி வரும் பத்திரிக்கை ஊடக மற்றும் ரசிக பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் மட்டுமே என்னையும் என் குழந்தைகளையும் இந்த காலகட்டத்தில் துணையாக காத்திருக்கும். இந்த சோதனையில் இருந்து நாங்கள் மீண்டு வர, உங்கள் பிரார்த்தனைகள் துணை நிற்க வேண்டும் என்று உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன என்று குறிப்பிட்டிருக்கிறார் ஆர்த்தி.

பொதுவாக திரைத்துறையில் இருக்கும் நட்சத்திர ஜோடிகள் இருவரும் பிரிவதாக இருந்தால் பல்வேறு சர்ச்சைகளை தவிர்க்க, இருவரும் சேர்ந்துதான் பிரிவு செய்தியை வெளியில் சொல்வார்கள். ஆனால் ஜெயம் ரவி விஷயத்தில் மனைவி ஆர்த்தி எதிர் நிலைப்பாடு எடுத்திருப்பது இந்த விவகாரத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...