2025 ஆண்டிற்கான உலகின் அமைதியான நாடுகள் பட்டியல் இப்போது வெளியாகியுள்ளது. அதில் வழக்கம் போல டாப் இடங்களில் ஐரோப்பிய நாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. இதில் இந்தியா எங்கே உள்ளது.. பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட இந்தியாவின் அண்டை நாடுகள் எந்த இடத்தில் உள்ளன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஐஇபி எனப்படும் பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகின் அமைதியான நாடுகள் பட்டியலை வெளியிடும். இந்தாண்டிற்கான அமைதி பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் 99.7% உள்ளடக்கிய 163 நாடுகளை ஆய்வு செய்து இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மூன்று முக்கிய துறைகளில் 13 விஷயங்களை ஆய்வு செய்து இந்த லிஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு, உள்நாட்டு மற்றும் சர்வதேச விவகாரம், ராணுவமயமாக்கலின் அளவு ஆகியவற்றை வைத்து இந்த லிஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தாண்டும் இந்த லிஸ்டில் வழக்கம் போல ஐரோப்பிய நாடுகளே முன்னிலையில் உள்ளன. டாப் 10ல் 8 நாடுகள் ஐரோப்பிய நாடுகளாகவே உள்ளன.
- ஐஸ்லாந்து (1.095) இதில் முதலிடத்தில் ஐஸ்லாந்து இருக்கிறது. ஐஸ்லாந்து தொடர்ந்து உலகின் மிகவும் அமைதியான நாடு என்ற பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.. 2008ம் ஆண்டு முதலே ஐஸ்லாந்து தான் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. குறைந்த குற்றங்கள், வரவேற்கும் மக்கள் ஆகியவையே இதன் பிரதான காரணம். மேலும், இங்கு வன்முறை குற்றங்கள் ரொம்பவே அரிது என்கிறார்கள். இதனால் பெரும்பாலும் ஐஸ்லாந்து போலீசார் துப்பாக்கிகளை கையில் வைத்திருக்க மாட்டார்களாம்.
- அயர்லாந்து (1.260) அயர்லாந்து இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. உள்நாட்டில் நிலவும் அமைதி, நிலையான அரசியல் சூழல், அமைதியான சர்வதேச உறவுகள் மற்றும் குறைந்த குற்ற விகிதங்கள் ஆகியவை இதற்குக் காரணமாகும். பயங்கரவாதம் என்பது இங்கு எப்போதும் இருந்ததே இல்லை. உலகில் மிகவும் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக அயர்லாந்து இருக்கிறது.
- நியூசிலாந்து (1.282) அடுத்து நியூசிலாந்து.. மனித உரிமைகளை நிலைநாட்டுவதில் முதன்மையாக இருக்கும் நியூசிலாந்து, உலகின் மூன்றாவது அமைதியான நாடாகும். குற்ற விகிதங்கள், வன்முறைச் சம்பவங்கள் குறைவாக இருப்பது.. வலுவான சமூகப் பாதுகாப்பு முறை இதற்குப் பிரதானக் காரணமாகும்.
- ஆஸ்திரியா (1.294) இந்த லிஸ்டில் ஆஸ்திரியா 4வது இடத்தில் இருக்கிறது.. வலுவான பொருளாதாரம், விரிவான சமூக அமைப்புகள், உயர் கல்வி மற்றும் குறைந்த குற்ற விகிதங்கள் இதற்குப் பிரதானக் காரணம். இதனால் அங்குப் பொதுமக்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குகிறது.
- சுவிட்சர்லாந்து (1.294) பல காலமாக நடுநிலை சூழலில் இருந்த சுவிட்சர்லாந்து, தொடர்ந்து உலகின் அமைதியான நாடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. ஒரு நிலையான ஜனநாயகம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு சிறந்து இருப்பதால் தான் சுவிட்சர்லாந்து தொடர்ந்து 5வது இடத்தில் இருக்கிறது.
- சிங்கப்பூர் (புள்ளி: 1.357) அடுத்த இடத்தில் சிங்கப்பூர் இருக்கிறது. டாப் 10 இடங்களில் இடம்பெற்றுள்ள ஒரே ஆசிய நாடு சிங்கப்பூர் ஆகும். கடுமையான சட்டங்கள், குறைந்த குற்றங்கள், திறமையான உள்கட்டமைப்பு ஆகியவை பாதுகாப்பு மற்றும் அமைதியான சூழலைத் தருகிறது.
- போர்ச்சுகல் – வீட்டுவசதி, வேலை-வாழ்க்கை சமநிலை, தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் தொழில்மயமான நாடுகளின் சராசரியை விட உயர்ந்த இடத்தில் உள்ள போர்ச்சுகல், அதன் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தின் காரணமாக சிறந்த வெளிநாட்டினர் செல்லும் இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இன்னும் சிறப்பாக, போர்ச்சுகீசிய வாழ்க்கை முறையை அனுபவிக்க வங்கியை உடைக்க வேண்டிய அவசியமில்லை: குடியரசு கண்டத்தில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் இடங்களில் ஒன்றாக உள்ளது.
- டென்மார்க் – தரவரிசையில் இதுபோன்ற சிறிய மாற்றங்கள், அந்த இராச்சியம் சிறப்பாக செயல்படுகிறது என்பதை மட்டுமே நமக்குத் தெரிவிக்கின்றன. பயணம் செய்வதற்கும் வாழ்வதற்கும் பாதுகாப்பான நாடான டென்மார்க், அதிக அளவு அரசியல் ஸ்திரத்தன்மை, பத்திரிகை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்கான மரியாதை ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. இது உயர் மட்ட வருமான சமத்துவத்தையும் பெருமைப்படுத்துகிறது மற்றும் உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாக அடிக்கடி தரவரிசைப்படுத்தப்படுகிறது.
- ஸ்லோவேனியா – ஐரோப்பாவிலிருந்து முதல் 10 இடங்களில் இடம்பிடித்த ஒரே நாடு இதுவாகும், இது CEE பிராந்தியத்தில் மிகவும் அமைதியான நாடாக தனித்து நிற்கிறது. (இருப்பினும், செக்கியா மிகவும் பின்தங்கியிருக்கவில்லை, 11வது இடத்தில் உள்ளது, ஹங்கேரி மற்றும் குரோஷியாவும் முதல் 20 இடங்களுக்குள் வருகின்றன.)
- பின்லாந்து – ஆச்சரியப்படத்தக்க வகையில், அமைதியும் மகிழ்ச்சியுடன் தொடர்புடையது. உலகின் மிகவும் நல்லொழுக்கமுள்ள மற்றும் திருப்திகரமான நாடுகளில் ஒன்றாக அதன் நற்பெயரை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், பின்லாந்து ஐக்கிய நாடுகளின் மகிழ்ச்சி அறிக்கையின் நிரந்தர சிறந்த செயல்திறன் கொண்ட நாடாகும்.
இந்தியா எங்கே? இதில் இந்தியா 115ஆவது இடத்தில் இருக்கிறது. கடந்தாண்டும் 115ஆவது இடத்தில் இருந்த நிலையில், இந்தாண்டும் அதே நிலையைத் தக்கவைத்துக் கொண்டு இருக்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளில் பாகிஸ்தான் மட்டுமே மோசமான நிலையில் உள்ளது. பாகிஸ்தான் இந்த லிஸ்டில் 144ஆவது இடத்தில் இருக்கிறது.