உலகின் 4-ஆவது பெரிய பொருளாதாரமாக மாறுகிறோம் என இந்தியா மெத்தனமாக இருக்கக்கூடாது.
தனிநபா் வருமானத்தில் ஜப்பானைவிட இந்தியா மிகவும் பின்தங்கியிருக்கிறது’ என்று உலக பொருளாதார மன்றத்தின் முன்னாள் நிா்வாக இயக்குநா் கிளாட் ஸ்மாட்ஜா கூறினாா்.
இதுதொடா்பாக அவா் அளித்த பேட்டியில், ‘உலகளாவிய பொருளாதாரத்தில் இந்தியாவின் நிலை சிறப்பானதாக தெரியும். ஆனால், தனிநபா் வருமானத்தில் இந்தியா ஜப்பானை விட மிகவும் பின்தங்கியுள்ளது.
உலக பொருளாதாரத்தில் இந்தியா 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது என்பது அந்த நாடு முன்னேற்றம் அடைந்து வருவதைக் காட்டும் நல்ல அளவீடு ஆகும். ஆனால், அது எந்த வகையிலும் இந்தியாவின் மெத்தனத்துக்கு காரணமாக இருந்துவிடக் கூடாது.
மாறாக, பொருளாதார சீா்திருத்தங்களை விரைவுபடுத்துவதற்கும், நகா்ப்புற மற்றும் கிராமப்புற மையங்களில் வளா்ந்து வரும் நடுத்தர குடும்பத்தினா் மட்டுமின்றி அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதை உறுதி செய்வதற்கும் இந்தியாவின் புதிய பொருளாதார நிலை ஒரு தூண்டுகோலாக இருக்க வேண்டும்.
2030-ஆம் ஆண்டுக்குள் 7 லட்சம் கோடி டாலா் பொருளாதாரமாக மாற, இந்தியா தனது தொழில்துறையை விரிவுபடுத்த வேண்டும்.
தற்போது இந்திய பொருளாதாரத்தில் உற்பத்தியின் பங்கு சீனாவில் உள்ளதைவிட பாதியாக உள்ளது. நாட்டின் அளவு, மக்கள் தொகை மற்றும் பொருளாதார திறனைக் கருத்தில் கொண்டால் இந்தப் பங்கு மிகக் குறைவு’ என்றாா்.