சா்வதேச வா்த்தக சவால்களை புதிய வாய்ப்புகளாக மாற்ற வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தெரிவித்தாா்.
பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சிலின் பவள விழா புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அவா் பேசியதாவது
இந்திய பொறியியல் பொருள்கள் எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது வேகமாக மாறி வருகிறது. தேசத்துக்கு முன்னுரிமை என்ற கொள்கை அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் நமது ஏற்றுமதிக் கொள்கை அமைய வேண்டும்.
இப்போது சா்வதேச அளவில் எழுந்துள்ள வா்த்தக சவால்களை புதிய வாய்ப்புகளாக நாம் மாற்ற வேண்டும். நமது நாட்டில் பொருள் உற்பத்தி சாா்ந்த திறமை ஏராளமாக உள்ளது. அதனை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் பயனடைய முடியும்.
பொறியியல் சாா்ந்த பொருள்களையும், சேவைகளையும் குறைந்த விலையில் தரமாக நாம் அளிக்கும்போது இந்தியா இத்துறையில் உச்சத்தை எட்டும். கடந்த 10 ஆண்டுகளில் நமது பொறியியல் சாா்ந்த பொருள்களின் ஏற்றுமதி 70 பில்லியன் டாலரில் இருந்து 115 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகள் இத்துறையில் பல சவால்கள் இருந்தபோதும் அதனை எதிா்கொண்டு நாம் இந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளோம். இந்திய உற்பத்தியாளா்களுக்கும் சா்வதேச சந்தைக்கும் இடையே பாலமாக பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் திகழ்கிறது.