No menu items!

அம்பானி பேரன் பள்ளிக்குப் போகிறான்

அம்பானி பேரன் பள்ளிக்குப் போகிறான்

ஒரு குழந்தை முதல் பள்ளிக்குப் போவது இந்தியா முழுவதும் வைரலாகி இருக்கிறது.


காரணம் அந்தக் குழந்தை ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானியின் பேரன். பெயர் பிரித்வி. தாத்தாவின் சொத்து மதிப்பு 103 பில்லியன் டாலர். அதாவது 78,22,50,49,50,000.00 கோடி ரூபாய். எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள். மூச்சு மூட்டும்.


இத்தனைப் பணக்காரரின் பேரன் முதல் முறையாக பள்ளி செல்வது மீடியாக்களின் கவனத்தைக் கவர ஒரே நாளில் வைரலாகிவிட்டான் பிரித்வி. மலபார் ஹில்ஸ் பகுதியிலுள்ள சன் ஃப்ளவர் பள்ளியில் பிரித்வியை சேர்த்திருக்கிறார்கள்.


மகன் பள்ளிக்குச் செல்வதில் அதிக சந்தோஷப்படுபவர்கள் அப்பா ஆகாஷ் அம்பானியும் அம்மா ஷ்லோகா மேத்தாவும். டிசம்பர் 10 2020ல் பிறந்த பிரித்விக்கு இப்போது இரண்டு வயது.


சாதாரண குழந்தைகள் போல் பிரித்வி பள்ளிக்குச் செல்ல இயலாது. தாத்தா அதி பாதுகாப்பு வளையத்தில் இருப்பவர் என்பதால் பேரனுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


பிரித்வி பள்ளி செல்லும் வாகனத்தை தொடர்ந்து பாதுகாப்பு வாகனங்களும் செல்லுகின்றன. அது மட்டுமல்லாமல் பள்ளிக்குள்ளும் பாதுகாப்பு படையினர் சாதாரண உடையில் நிற்பார்கள். பள்ளியை சுற்றி ஒரு கிலோ மீட்டர் வட்டாரத்துக்கு பாதுகாப்பு படையினர் இருப்பார்களாம். பிரித்விக்காக ஒரு மருத்துவரும் பள்ளி வளாகத்தில் இருப்பாராம்.


சாமானிய மக்கள் எப்படி தங்கள் குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்கு முன் அப்பள்ளிக்கு சென்று ஆராய்வார்களோ, அதேபோல் அம்பானி குடும்பத்தினர் பள்ளிக்கு சென்று அங்குள்ள வசதிகளை ஆய்வு செய்துதான் இந்தப் பள்ளியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அம்பானியின் பிரமாண்ட வீடான அண்டிலியாவிலிருந்து இரண்டு கிலோமீட்டர் பள்ளி இருப்பது கூடுதல் சாதகமாக பார்த்திருக்கிறார்கள்.


இனி சமூக ஊடகங்களில் பிரித்வியும் பாப்புலர் முகமாக மாறிவிடுவான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...