சென்னை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 -ந் தேதிகொண்டாடப்படுகிறது. இந்த நாள், 1639 ஆம் ஆண்டு சென்னை நகரம் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் மெட்ராஸ் என்ற பெயரில் நிறுவப்பட்டதை நினைவுகூர்கிறது. சென்னை, தமிழ்நாட்டின் தலைநகரமாகவும், இந்தியாவின் முக்கியமான கலாச்சார, பொருளாதார மையங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்த நாளில், சென்னையின் பாரம்பரியம், வரலாறு மற்றும் பன்முகத்தன்மையை மக்கள் கொண்டாடுகின்றனர்.
இந்தியா - ரஷ்யா இடையேயான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், வர்த்தக பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், 2030-க்குள் 100 பில்லியன் டாலர் இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.